நா
Showing posts with label சிந்திக்க. Show all posts
Showing posts with label சிந்திக்க. Show all posts

சம்பவம் ஒன்று.

ஊரிலிருந்து வந்து என்னுடன் தங்கியிருந்த நண்பன் ஒருவன் 'ஏதாவது நல்ல சண்டைப் படமாப் பாத்து ஆங்கிலப்படம் ஒண்டு போட்டுவிடு' என்றான். சரி சுவாசியமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கட்டுமே என்று Wanted படத்தைப் போட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டேன். திரும்பி வந்திருந்தபோது படமும் முடிந்திருந்தது. 'எப்பிடிப் படம் இருந்தது, நல்லதா?' கேட்டேன். 'சூப்பர் படம், அதில ஒருத்தன் இருக்கிறான் அவன் சுட்ட புல்லட்டை திருப்பியும் துவக்கு குழாய்க்குள்ள எடுக்கிறான், நல்லா இருந்திச்சு' என்றான்.

படம் பார்த்தவர்கள் இருக்க மற்றவர்களுக்கு :- படத்தில் ஒருவனுக்கு பின் மண்டைக்குள்ளால் புகுந்து நெற்றியைத் துளைத்து முன்வரும் புல்லட்டை குறைந்த வேகத்தில் (slow motion) காட்டுவார்கள். பின்னர் அந்தப் புல்லட் எங்கிருந்து வந்தது எனக் காட்டுவதற்காக காட்சிகளைப் புல்லட்டை பிரதானமாக வைத்து பின்னோக்கிக் காட்டி அது எங்கிருந்து வந்தது என்பற்காக மீண்டும் புல்லட் துப்பாக்கிக் குழாயை அடைவதாக காட்டியிருப்பார்கள்.

சம்பவம் இரண்டு.

நான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஒரு நண்பனுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது அவன் இடது கையின் ஐந்து விரல்களிலும் நகங்களை வளர்த்து வைத்திருந்ததை பார்த்தேன். 'இடது கைவிரல்களில் நகம் வளர்ப்பது நல்லதல்ல, வெட்டி விடு' என்றேன் (அவன் வலது கைப்பழக்கம் உடையவன்). ஏன் எனறு என்னை வித்தியாசமாக நோக்கினான். 'இல்ல... இடது கையை மலம் கழுவப் பாவிக்கிறதுதான, சோப் போட்டுக் கழுவினாலும் நகம் இருந்தால் எச்ச சொச்சங்கள் இருக்க வாய்ப்பிருக்கு' என்றேன். 'சீ... நான் ரொய்லற் ஸ்பிரேயர் (toilet sprayer) மட்டும்தான் பாவிக்கிறனான், கை இல்லை' ஒரு புன் முறுவலோடு சொன்னான். 'ஓ... அப்படியா' என்றேன். வேறன்ன சொல்ல.

சம்பவம் மூன்று.

தொலைக்காட்சியில், பம்பாய் படப்பாடலான, `அந்த அரபிக்கடலோரம்‘ ஓடிக்கொண்டிருந்தது. வீட்டிலிருந்த உறவினர்கள், குழந்தைகள் ரசனை யோடு பார்த்துக் கொண்டிருந்தனர். என்னிடம் ஏதோ கேட்க வந்த பக்கத்து வீட்டு சிறுபெண், எட்டு வயதுக்குள் இருக்கும், அவளும் பாடலை பார்த்துக் கொண்டிருந்தாள். பாடலின் இடையில் ஒருக்காட்சியில், அரவிந்தசாமி, மணீஷாகொய்ராலா வின் கைகளை பற்ற, மணீஷா கைகளை விடுவித்துக் கொள்ளும்போது, வளையல்கள் மட்டும் கழன்று அரவிந்தசாமியின் கைகளில் இருக்கும். அதைப் பார்த்த அந்த சிறுபெண், ``ஈட்டுக்கு (அடகுக்கு) கழட்டுறாங்க’’ எனக் கூற, அனைவரும் சிரித்தனர். அந்தக் காட்சிக்கான அவளது புரிதல் புரிந்த போது..., எனக்கு சிரிப்பு வரவில்லை.

அம்பிகா எனும் வலைப்பதிவருடையது.

*********

ஒரு சம்பவம் அர்த்தப்படுத்தப்படுவது அவரவர் புரிதல்களுக்கேற்பவே. ஆரம்ப அர்த்தப்படுத்தல்களில் தவறு கண்டுபிடிக்க முயல்வது சரியாகப் படுவதில்லை எனக்கு. ஊரிலிருந்து வந்த நண்பன் இன்னும் நான்கைந்து ஆங்கிலப் படங்களை பார்த்தால் தனது புரிதலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். சிறுவயது முதலே பெற்றோர்களால் இடது கைவிரல் நகங்களை வளர்க்காதே எனறு அறிவுறுத்தப்பட்ட நான் அதற்குள் மட்டுமே இருந்திருக்கிறேன் வெளியில் சிந்திக்காது. மூன்றாவது சம்பவத்தில் வரும் சிறுமியின் புரிதல் கவலைக்குரியது. வீட்டில் நடந்த ஏதோவொரு நிகழ்வு ஆழப்பதிந்திருக்கிறது அச்சிறுமிக்கு.

ஆரம்பப் புரிதல்களுக்கு எங்கள் மேல் பழிசுமத்த முடியாது. ஆனால் புரிதல்களுக்காக எங்களை விரிவு படுத்தாதிருப்பதுதான் தவறு. எங்கள் அனுபவம், இன்னொருவரின் அனுபவத்திலிருந்தான படிப்பினை, தர்க்க ரீதியான சிந்தனைகள் மற்றும் எப்போதும் தன்னைத்தானே திருத்திக்கொண்டிருக்கும் விஞ்ஞானம் போனறன எமது புரிதல்களை சம்பவத்தின் உண்மையான நிலைக்கு அருகில் அல்லது அதற்கு கொண்டு செல்லும்.

இச்சம்பவங்களின் புரிதல்களூடு மதங்களையும் அதன் அபத்தங்களையும் எழுதவேண்டும் என சிந்திக்கிறேன். பதிவின் போக்கு இன்னொரு நிலைக்கு மாறுவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்து இப்போதைக்குத் தவிர்க்கிறேன்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ | கௌபாய்மது.

 

விளம்பரங்களால் மலிந்து கிடக்கும் உலகம் இது. விளம்பரங்களால் எவ்வளவு தூரம் வியாபாரம் அதிகமாக நடக்கிறது எனும் சந்தேகம் இன்னும் இருந்தாலும் அதீத விளம்பரங்களால் வெள்ளியையும் பிளாட்டினம் என்று சொல்லியே விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது.


மூன்று வாரங்களில் சிவப்பழகு(??) என்பதிலிருந்து எயிட்ஸை மூன்று நாட்களில் குணப்படுத்துவோம் வரை விளம்பரங்கள் மலிந்து கிடக்கின்றன். மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் பலன் தருவதை விட ஒரு வித பயத்தையே தருகின்றன.

கரீனா கபூர் தனது அழகின் இரகசியத்தை இதோ வெளிப்படுத்துகின்றார் என்று ஒரு புது Body Cream ஒன்றை அறிமுகப்படுத்துகின்றார்கள். கரீனாவுக்கே அன்றுதான் அப்படியொரு கீரீம் இருப்பதே தெரிந்திருக்கும் என்று கற்பூரம் அணைந்து சத்தியம் செய்யத் தயாராய் இருக்கிறேன். (கடவுளுக்குப் பயந்தல்ல, கற்பூரம் சுட்டாலும் பரவாயில்லை என்று).

சொப்பன ஸ்கலிதத்தால் உடல் மெலிந்து தள்ளாடுகின்றீர்களா? இதோ குறைந்த செலவில் இரண்டு நாட்களில் தீர்வு தருகின்றோம் என்று பிரச்சினை இல்லாத ஒன்றுக்கே தீர்வு தரத் தயாராய் இருக்கும் தயாள குணம் படைத்த விளம்பரங்கள் வேறு.

இன்று இலங்கையின் HitAd இல் கண்ட இவ்வகை அபத்தங்களில் ஒன்று இதோ கீழே,


இதிலிருக்கும் பெண் மானநஸ்டவழக்கு (மானநஸ்ட வழக்கு போடுறதுதான் இப்ப Trend என்று அறிந்தேன்) போட்டால் கூடக் குற்றமில்லை.

ம்ம்ம்... Body Cream க்கு என்ன தமிழ்? உடற்பசை ஏனோ ஒட்டுதில்லை.. :)

பிரியமுடன்,
மதுவதனன் மௌ. | கௌபாய்மது

 

கேள்விகளினூடு தெளிவு பிறக்கிறது. கேள்விகளினூடு மாயைகள் உடைகின்றன. கேள்விகளினூடு எம் இருப்பிற்காக அர்த்தத்தை உறுதிப்படுத்துகின்றோம். ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது? அருவமானதை ஏன் அவன் என்கிறோம்? போன்ற கேள்விகள் இருப்பிற்கான தேடல்களுக்கு விடை தருகின்றன.

கேள்விகளினூடு புதிய விடைகளைக் கண்டுபிடிப்பதொருபுறம் இருக்க, எமக்குச் சார்பான விடைகளுக்காக கேள்விகள் கேட்பதும் எமது வளத்துக்கான படியாகின்து.

மனிதன் சமூக விலங்கு. வாழுமிடமெல்லாம் இன்னொருவருடனான தொடர்பாடல் தொடர்கின்றது. தொடர்பாடலில் வெற்றி பெறுவதில் தங்கியிருக்கிறது எங்கள் உயர்ச்சி. வீட்டில் அப்பாவிடம் காரணம் கூறி காசு பெறவும், பாதகமின்றி கணவன் மனைவிக்கிடையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், நேர்முகத்தேர்வொன்றில் வெற்றி பெறவும், நாடுகளுக்கிடையான பேச்சுவார்த்தைகளிலும் சாதகமான பதில்களுக்கான சரியான கேள்விகளே வெற்றிபெறச்செய்கின்றன.

* இலகுவான கேள்வியிலிருந்து ஆரம்பியுங்கள்.
மொழிப்புலமை, அதியுயர் அறிவுத் திறமையான கேள்விகளை விடுத்து அடிப்படையான கேள்விகளிலிருந்து ஆரம்பியுங்கள்.

* ஒரு விடயத்தை அறிவதற்கான கேள்வியெனின், குறிப்பிட்டுக் கேளுங்கள்.
கணினி சம்மந்தமாக உங்களுக்கு என்னென்ன தெரியும் எனக்கேட்பதை விடுத்து, உபுண்டுவில் வேலை செய்திருக்கிறீர்களா, ஜாவா மொழி தெரியுமா, இணைய வடிவமைப்பில் எத்தனை வருடம் வேலை செய்திருக்கிறீர்கள் போன்றன உங்களுக்கான விடையை சிறப்பாகப் பெற்றுத்தரும்

* உணர்ச்சிவசப்பட்டுக் கேள்வி கேட்காதீர்கள்.
எதிராளியின் கேள்விகளோ அல்லது பதில்களோ சிலவேளைகளில் எம்மைப் பொறுமை இழக்கச் செய்யும், கோபத்தைத் தூண்டும். அந்நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேச ஆரம்பிக்காதீர்கள். உங்களுக்கான விடையை இழைக்கும் சந்தர்ப்பம் இங்கே அதிகம்.

* கேட்கும் கேள்விகள் குறித்தான அறிவை இயலுமானவரை ஏலவே பெற்றிருங்கள்.
சாடைமாடையாக அறிந்ததை வைத்து கேள்விகள் கேட்காதீர்கள். இப்போது தொலைபேசி வரை இணையம் வந்துவிட்டது. கட்டாயம் அவ்விடயம் பற்றி கேள்வி கேட்கத்தான் வேண்டுமெனின் தொலைபேசியூடாக கூகுள் செய்யுங்கள். அறிவைப் பெறுங்கள். பிறகு கேளுங்கள்.

* அமைதியான முறையில் கேள்விகளைத் தொடுங்கள். எதிர்க் கேள்விகளுக்காக சிந்தியுங்கள்.
எதிராளிக்கு நீங்கள் அமையாக தோற்றமளிக்கும்போது, உங்கள் கேள்வியின் மீதான விடையை சிறப்பாகச் சொல்லவேண்டும் என்று மனநிலை உருவாகும். கேள்வி சம்மந்தமான நிறைந்த அறிவும் உங்களுக்கு இருப்பதான தோற்றைத்தை அது உண்டாக்கும். எதிராளியின் மறு கேள்விகளுக்காக இயலுமானவரை சிந்தித்துப் பதிலளியுங்கள்.

* பெருந்தன்மையோடு கேள்வி கேளுங்கள்
எதிராளியை கீழ்த்தரமாகவோ, கேள்விகுறித்தான அறிவற்றவராகவோ நினைக்கவேண்டாம். பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள்.



நீங்கள் கேட்கும் முறையான கேள்வியில்தான் உங்களுக்குச் சாதகமான பதில் கிடைக்கும்.

கணியனும், பரதனும் நண்பர்கள். இருவருக்கும் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது. இருவரும் மதகுரு ஒருவரிடம் சென்றனர். கணியன் மதகுருவிடம் சென்று 'இறைவனை நோக்கிப் பிரார்த்தனை செய்யும்போது, புகைப்பிடிக்கலாமா?' என்று கேட்டதற்கு 'தவறு மகனே, இறைவனை தூய மனதுடன், தீய செயற்பாடுகளின்றித்தான் பிரார்த்திக்கவேண்டும்' என்றார். பின்னர் பரதன் அதே மதகுருவிடம் சென்று 'நான் புகைபிடித்துக்கொண்டிருக்கும்போது இறைவனைப் பிரார்த்திக்கலாமா?' என்று கேட்டதற்கு, 'தாராளமாக மகனே, இறைவனைப் பிரார்த்திப்பதற்கு காலநேரம் பார்க்கத் தேவையில்லை' என்றார்.

கேள்விகள் கேட்பதில், கேட்கும் முறையில் எம் வளர்ச்சி தங்கியிருக்கிறது.

பி.கு : பதிவு கேள்விகள் சம்மந்தப்பட்டாகையால், இலகுவான விளங்குகைக்காக குட்டிக்கதை மதம், இறைவன் சம்மந்தப்பட்டிருக்கிறது. இறைவன் இருக்கின்றது என்றோ, மதகுரு என்பவர் தூய்மையானவர் என்றோ, பிரார்த்திப்பதால் நாடும் வீடும் நலம்பெறும் என்றோ யாரும் முடிவெடுத்துக்கொள்ள வேண்டாம். அவை குறித்தும் கேள்விகளைத் தொடுங்கள். தெளிவு பெறுங்கள்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ - கௌபாய்மது

 

பாலியல் வல்லுறவும் ஆண்களும் (மூன்று)





நம்பிக்கை ஐந்து : கர்ப்பம் தரிக்கும் அபாயம் இருப்பதைத் தவிர, பெண்களைப்போல ஆண்கள் தங்கள் மீதான பாலியல் வல்லுறவில் பாதிக்கப்படுவதில்லை.



விளக்கம் : பால் ரீதியான பாதிப்பாக பெண்கள் கர்ப்பம் தரித்தலை தவர்த்து, ஆண்களும் தங்கள் மீதான பாலியல் வல்லுறவின்போது பலவழிகளில் பாதிக்கப்படுகிறார்கள். சிலவேளைகளில் பெண்ணிலும் அதிகமாக.

ஆணொருவர் ஆணை பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கும்போது மிக அதிகமான வன்முறை பாவிக்கப்படுகிறது. பெண்கள் மீதானதைப் போலன்றி ஆண்கள் மீதானதில் ஆயுதங்களும் பாவிக்கபடுகின்றன. அதிக இடங்களில் பலர் சேர்ந்து ஒரு ஆணை வல்லுறவுக்காளாக்குவது அதீத பாதிப்பை ஏற்படுத்துகின்றது பல வேளைகளில் அது தற்கொலைக்கான முடிவையும் தந்துவிடுகிறது.

ஆண்கள் மீதான வல்லுறவு அதிகமாக குதவழியினூடானதாக இருப்பதால் விளைவாக குதவழி உட்கிழிவு அல்லது காயம் ஏற்படுகிறது. இது எச்.ஐ.வி தொற்றுக்கான சாத்தியப்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் Rape trauma syndrome என்படும் வல்லுறவின் பின்னான அவரைச் சுற்றியிருப்பவர்களையும் தொடர்ந்து கவலையிலாழ்த்தும் விளைவுக்கு உள்ளாக நேரிடுகிறது. Rape trauma syndrome http://en.wikipedia.org/wiki/Rape_trauma_syndrome ஆனது ஆண் பெண் இருவருக்குமே பொதுவான விளைவுகளையே தருகின்றது. இது பற்றிப் பிறிதொரு பதிவில் பார்ப்போம்.

தொடர்ந்து செல்லும் விளக்கங்களுக்கிடையில் அனுபவம் ஒன்றையும் பார்த்துவிடுவோம்.

எனது நண்பரொருவன் என்னிலும் ஆறேழு வயது கூடியவர், அவர் தனது பதின்ம வயதில் இருக்கும்போது காவற்துறையினரால் புலிச் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் சிறையிலிருந்தவர். அதன்போது அவர் முதன்முறை சிறையிலிந்த சிலரால் வல்லுறவுக்காளாகியிருக்கிறார். இரண்டாம் முறையும் காவலாளியிடம் பணம் கொடுத்துவிட்டு இவரது சிறைக்கூண்டுக்குள் வெளி நபர் ஒருத்தர் வரும்போது இவர் வேண்டுமென்று அணிந்திருந்த காற்சட்டையுடன் மலம் கழித்துவிட்டார். வந்தவர் இவரை நையப்புடைத்துவிட்டு திரும்பிச் சென்றுவிட்டார். (அவர் இப்போது என்ன செய்கிறார், எங்கே இருக்கிறார் என்பதெல்லாம் இப்பதிவுக்குத் தேவையில்லாததாகையால் தேவைப்படும்போது இன்னொரு தருணத்தில் கதைக்கிறேன். ). அதாவது ஆண்கள் மீதான ஆண்களின் வல்லுறவானது அதிகமாக குதவழியை நோக்கியதாகவே இருக்கிறது.


ஆண்கள் மீதான பாலியல் வல்லுறவானது சிறைக்கூடங்கள், இராணுவக் கட்டமைப்புக்கள், விடுதிகள் போன்ற இடங்களில் அதிகரித்த நிலையில் உள்ளன.

சரி அடுத்த நம்பிக்கையையும் அதற்கான விளக்கத்தையும், இருந்தால்
அதுசம்மந்தப்பட்ட அனுபவங்களையும் இன்னொரு பதிவில் பதிகிறேன்.




பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

பாலியல் வல்லுறவும் ஆண்களும் (இரண்டு)
பாலியல் வல்லுறவும் ஆண்களும் (ஒன்று) இற்கு இங்கே செல்லுங்கள்.

நம்பிக்கை நான்கு: வயதுவந்த ஆணொருவர் பெண்ணால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக முடியாது.
விளக்கம் : பாலியல் வல்லுறவு நிகழ்வுகளில் 97 வீதமானவை ஆண்களால் நிகழ்த்தப்பட்டவையாக இருந்தாலும் பெண்களால் செய்யப்பட்ட வல்லுறவுகளும் பதிவுகளில் உள்ளன. பெண்களும் பாலியல் வல்லுறவை நிகழ்த்தியிருக்கிறார்கள்; நிகழ்த்துகிறார்கள்.
இங்கே குறிப்பிடப்படவேண்டிய விடயம் ஒன்றுளது. அதாவது பெண்களால் வல்லுறவுக்காளாக்கப்படும் ஆண்கள் அதை வெளியில் சொல்வதில்லை. சொன்னால் தாங்கள் கோழைகள் ஆகிவிடுவோமோ என நினைக்கிறார்கள்.
குறிப்பிட்ட இந்நிகழ்வுகளில் பாலியல் வல்லுறவுக்காளாக்கிய பெண்ணே ஆணை ப்ளாக்மெயில் செய்ய ஆரம்பிக்கிறாள். இதை வெளியில் கூறினாயானால் நீதான் என்னை வல்லுறவுக்குள்ளாக்கியதாக கூறிவிடுவேன் என்கிறாள். அதனால் இவ்வகை வல்லுறவுகள் பதிவுகளில் வருவதில்லை.
இவ்வகைக் நிகழ்வுகள் கிராமப் புறங்களைவிட நகரங்களிலும் மேற்குலக நாடுகளிலுமே அதிகமாக உள்ளது. இதன் போது ஆண் தனது பாலுறுப்பை பெண்ணினுள் செலுத்தவேண்டுமென்றில்லை. பெண் ஆண் மீது அதிர்வுக் கருவிகளை பாவிக்கிறாள்.
ஒரு பெண் பலவந்தமாக ஆணுறுப்பினை விறைப்புத்தன்மை ஆக்கமுடியாது என நினைக்கிறீர்களா? ஒன்றை யோசித்துக்கொள்ளுங்கள், ஆணாக நீங்கள் உங்கள் பாலுறுப்பின் மீது மிக மிகக் குறைந்த கட்டுப்பாட்டையே வைத்திருக்கிறீர்கள் அல்லது உங்கள் உடலில் நீங்கள் கட்டுப்படுத்த முடியாத பகுதிகளில் ஒன்றாக உங்கள் ஆணுறுப்பும் உள்ளது.
உதாரணத்திற்கு டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த இந்தச் செய்தியை வாசித்துப் பாருங்கள். மூன்று பெண்மணிகள் ஒரு ஆணை கடத்திப் பாலியல் வல்லுறவுக்காளாக்கிய சம்பவம் பற்றியது..
பி.கு: நம்பிக்கைகளும் விளக்கங்களும் தொடரும். நேரம் இருக்கும்போது பதிகின்றேன்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

மின்சாரத்தின் பயங்கரம் பற்றிய ஒரு சலனப்படம்
இதை எனக்கு என் நண்பனொருத்தன் அனுப்பியிருந்தான். பார்த்தபின் அதிர்ச்சியாக இருந்தது. யூடியூப்பில் இது சம்மந்தமாகத் தேடினேன் கிடைக்கக் கஷ்டமாக இருந்தது. இந்த வீடியோ நிறையப் பேரினைச் சென்றடைந்தால் நல்லது. மின்சாரம் சம்மந்தப்பட்ட வேலைகளை செய்யும்போதும் அதுசம்மந்தமான கருவிகளை பயன்படுத்தும்போதம் அவதானமாகச் செய்ய இந்த வீடியோவின் ஞாபகம் உதவிசெய்யும் என்பதில் தவறேயில்லை.


யூடியூப்பி்ல் ஏற்ற முயற்சித்தேன். தடுக்கிறார்கள். கடிதம் எழுதி கேட்கவேண்டும் என்ன பிரச்சினை என.

மேலும் இது கடந்த மே மாதம் டெல்லியில் நடந்ததாகக் கூறுகிறார்கள். இதில் சம்மந்தப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனாம். :'(


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

பாலியல் வல்லுறவும் ஆண்களும் (ஒன்று)
பாலியல் வல்லுறவு என்ற சொல்லைவிட கற்பழிப்பு என்ற சொல்லையே அதிகம் கேட்டிருப்போம்; கேட்டுக்கொண்டிருக்கிறோம். பத்திரிகைகளும் மலிந்து கற்பழிப்பு என்ற சொல்லையே பிரதானமாகப் பயன்படுத்துகின்றன. கற்பு(??) என்பது பெண்ணுக்குரியது, ஒரு பெண்தான் கற்பழிக்கப்படலாம் என ஆண்டாண்டு காலம் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறோம். முன்னைய வரியை காரண காரியங்களோடு சிந்தித்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வரும். நான் சொல்ல வந்தது இதுவல்ல. நாம் எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கும் சிலவற்றைத் தவறானதென்கிறேன். மேலும் இவற்றை அறியவேண்டிய தேவையும் இருப்பதால் இங்கே கூற விளைகிறேன்.

நம்பிக்கை ஒன்று : ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதில்லை.
விளக்கம் : ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக முடியும்; ஆளாகிறார்கள். ஆண்களின் தோற்றம், தொழில், உருவம், பலம், இனம், பாலியல் விருப்பு வெறுப்பு என்னவாக இருந்தாலும் அவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படலாம். இராணுவத்தில், சிறையில், பூட்டிய அறையில், பொது கழிப்பிடங்களில், தொழில் செய்யும் இடங்களில், விடுதிகளில் என்று எங்குமே ஒரு ஆணின் மீதான பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்படலாம்.
ஆண்களின் மீதான வல்லுறவின் போது, வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் ஆண், பெண்கள் காட்டும் எதிர்ப்பைக்கூட காட்டாததான நிகழ்வுகளே அதிகம் உள்ளன. அல்லது அவன் எதிர்ப்பைக்காட்ட முடியாத அளவுக்கு உறைந்து போய்விடுகிறான் இவ்வாறான் ஒன்றை எதிர்பார்க்காததால்.

நம்பிக்கை இரண்டு : ஓரினச் சேர்க்கை (Homo-sexual) ஆண்கள் மட்டுமே பாலியல் வல்லுறவுக்கு உட்படுகின்றனர்.
விளக்கம் : ஓரினச்சேர்க்கை ஆண்களே பாலியல் வல்லுறவு செய்பவர்களின் அல்லது அந்த மனநிலையில் இருப்பவர்களின் அதிகமான இலக்காக இருக்கின்ற போதிலும் எதிரினச் சேர்க்கை (Hetro-sexual) ஆண்களும் பலவலாக பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுகிறார்கள். பாலியல் வல்லுறவுக்கு உட்படும் ஆண்களில் 40 வீதமானவர்கள் எதிரினச் சேர்க்கை ஆண்களே.

நம்பிக்கை மூன்று : ஓரினச் சேர்க்கை ஆணொருவரே இன்னொரு ஆணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவார்.
விளக்கம் : ஆண் பாலியல் வல்லுறவு புரிந்த ஆண்களில் பலர் எதிரினச் சேர்க்கை ஆண்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். எதிரினச் சேர்க்கை ஆணொருவர் ஒரு பெண்ணையோ ஆணையோ பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும்போது அவர் தான் பெண் மீது வன்புணர்வதாகவே யோசித்துக்கொள்வார். மேலும் ஆண்கள் மீதான் வல்லுறவின் போது அவரது மேலாதிக்கமும் அதிகமாக இருப்பதாக சந்தோசம் கொள்வார்.
இங்கே ஒரு கருத்துத் தெளிவாகிறது. அதாவது பாலியல் வல்லுறவு என்பது அதிகமாக கோபம், மேலாதிக்கம், கொடூரம், கட்டுப்படுத்தல் என்பவற்றுடன் சிறிதளவு பாலியல் உணர்வாலுமே நடக்கின்றது.

பாலியல் வல்லுறவும் ஆண்களும்(இரண்டு)
பி.கு: நம்பிக்கைகளும் விளக்கங்களும் தொடரும். நேரம் இருக்கும்போது பதிகின்றேன்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

கணிணியும் மயிரும்
கணிணி முன்னால் நிறைய நேரம் இருந்தால் (இது சும்மா இருக்கிறதில்லை, அதைப் பாவிக்குறதுதான்) தலை மயிர அதிகமாக உதிரும் என்பது உண்மையெனினும் அதற்கான காரணம் கணிணிப் பாவனையல்ல. சரியான உறக்கமின்மை, ஓய்வின்மை, மன உளைச்சல் மற்றும் மன அழுத்தமே காரணங்கள்.


இறந்தபின் மயிர் வளருமா?
இதற்கான விடை இந்த நேரத்தில் பலபேருடைய ஐயத்தை தீர்த்துவைக்கும் என்பதாலும், அநேகமானோர் இந்தக் கேள்விக்கான விடை பற்றிய குழப்பத்தை நீண்டகாலமாகவே கொண்டிருப்பதாலும் அவசியமாகிறது.

மயிர் என்பது புரோட்டீனாலான ஒரு இழை. அதன் வளர்ச்சிக்கான செயற்பாடான வளர்சிதை மாற்றத்துக்கான (metabolism) ஊட்டப்பொருட்கள் (nutrient) இன்றி அது வளராது. நகத்தின் வளர்ச்சிக்கும் இதுவே செயற்பாடு.

இறந்தபின் நீர் உலர்தலாலும் சுருங்குதலாலும் முகத்தில் ஏலவே இருந்த தாடியோ மீசையோ வளர்ந்தது போலவும், தலைமயிர் நீண்டது போல் தெரிவதும் ஒரு மாயையே. நீரினுள் கிடக்கும் இறந்த உடல்களுக்கு இந்த மாயையும் தெரியாது என்பதைக் கவனத்திற் கொள்க.

விரல் நுனி சுருங்கி உலர்வதால் இறந்த உடலில் நகம் வளர்வது போல் தெரிவதும் ஒரு செயற்பாடே. இறந்த பின் இரத்த ஓட்டமின்றி எந்தவித ஊட்டப்பொருட்களும் எந்தவித வளர்சிதை மாற்றங்களுக்கும் செலுத்தப்படாது என்பதால் இறந்தபி்ன் மயிரோ நகமோ வளர்வது இல்லை.
மயிர்ச் சந்தேகம்
"சும்மா மசிர்க் கதை கதையாத" எனப் பாவிப்பதிலிரும் "என்ன மயிரா போச்சு" என்பதிலும் மயிரானது தாழ்நிலைப் பொருளாகவும் உயர்நிலைப் பொருளாகவும் பாவிக்கப்படுவதன் காரணம் என்ன? :-) யாராவது பின்னூட்டமிடுங்கோ தெரிந்தால்.

தலைமுடி உதிர்தல் கவலைப்படுதற்குரிய நிகழ்வா?
ஒவ்வொருநாளும் முழுகும்போதும், தலைவாரும்போதும் அடப்பாவி இவ்வளவு மயிர் உதிர்கின்றதே என்ற கவலை பெண்களுக்கும் இருக்கின்றதெனினும் ஆண்களுக்கு அதிகம்தான். இந்த அர்த்தமில்லாக் கவலையால் வரும் மன உளைச்சலால் மேலும் அதிகமாக மயிர் உதிரும் என்பதை யாரும் உணர்வதில்லை.

சாதாரண் மயிருதிர்வு பற்றி அறிந்திருத்தல் மிக்க அவசியம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு நாளும் சாதாரணமாக 10 தொடக்கம் 100 மயிர்கள் உதிர்ந்துகொண்டேயிருக்கும். இது ஒரு இயற்கையான சாதாரண நிகழ்வு. அப்போ முற்றிலும் வழுக்கையானவர்களுக்கு இது நிகழ்வதில்லையே என்று கேட்டால் அப்பாவித்தனமாக முகத்தை வைப்பதைத் தவிர வேறொன்றுமறியேன். இந்தச் சாதாரண நிகழ்வுக்கு எந்தவிதமான சிகிச்சைகளும் அவசியமில்லை. உலகம் சுற்றிக்கொண்டிருப்பதைப் போல இதுவும் நடந்துகொண்டே இருக்கும்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 


பிரேம் கோபால் Vs ஏ ஆர் ரஹ்மான்
நானும் நேற்று தமிழ் இணையங்களுக்கு சென்றபோது பிரேம் கோபால் எனும் பெயர் அதிகமாக அடிபடுவதைப் பார்த்தேன். அவர் ஏதோ டான்ஸ் போட்டாராம், தமிழனின் உணர்வுகளை வெளிப்படுத்தினாராம் என்று. இது வழமையான உடான்ஸ் விவகாரமாக இருக்கும் என நினைத்து பார்க்காமலே விட்டுவிட்டேன். என் நண்பன் வேறு அதைப் பற்றிய பதிவிட்டிருந்தான். சரி பார்த்து விடுவோமே என்று இன்று காலைதான் பார்க்கத் தலைப்பட்டேன்.

தானாடாவிட்டாலும் தன் தசையாடும். நிஜமாகவே சொல்கிறேன். பார்க்கும்போது தொண்டை அடைத்தது. கண்ணீர் வழிந்தோடாவிட்டாலும் தேங்கி நின்றது. அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு ஏழு நிமிட உணர்ச்சிக் குவியலது. எல்லாத் தமிழ் மனங்களும் வேண்டி நிற்கும் தேவையது. ஆனாலும் 'பிரேம் கோபால் பிரதிபலிக்கின்ற உணர்வை வைத்திருக்கின்ற எல்லாத் தழிர்களினதும் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில எங்கள் போராட்டம் சரியான வழியில் சென்றதா? செல்கின்றதா?' என்ற கேள்வி மனதை இன்னும் கனக்கச் செய்தது.

இதேநேரம் ஏ ஆர் ரஹ்மானும் ஏனோ நினைவுக்கு வந்து சென்றார். பிரபலமில்லாத பிரேம் கோபால் வாழ்ந்து காட்டிய அந்து ஏழு நிமிடங்களுக்குரிய மதிப்பு எவ்வளவு அபரிமிதமானது என்று எல்லோருக்குமே புரிகிறது. பிரபலமான ஏ ஆர் ரஹ்மான் ஒஸ்கார் விருது பெறும் வைபவத்தில் 'அங்கே வாழ வழியின்றித் தவிக்கும் என் மக்களுக்கு விடுதலை வேண்டிப் பிரார்த்திக்கிறேன்' என்று ஒரு வசனம் கூறியிருந்தால் உலக அளவில் எவ்வளவு அடைந்திருக்கும்.

செய்யவேண்டிய நிலையிலிருப்பவர்கள் செய்யவேண்டிய நேரத்தில் செய்யாமல் இருப்பதுகூட தப்பாகவே படுகிறது. இதைப்பற்றி குறள் கூட இருக்கிறது ஞாபகம் இல்லை. தெரிந்தால் பின்னூட்டத்திலிடுங்கள்.

முத்துக்குமாரை நினைக்கவும் கவலையாக இருந்தது.

மதுவதனன் மௌ (aka) கௌபாய்மது

 

தன்னையே எரித்துக் காவியமாக்கிய முத்துக்குமரனின் சம்பவம் பற்றிய சிங்கள மக்களின் கருத்துக்களை இலங்கையில் வெளிவரும் இணையப் பத்திரிகையில் பின்னூட்டங்களாகப் பாருங்கள். அவை ஆங்கில மொழியில் இருப்பதுடன் பின்னூட்டமிட்டவர்களில் சிலர் தமிழர்களும் அடங்குவர்.
இங்கே சென்று பார்க்க.  http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=39113



 

சின்னக் குட்டியார் இங்கேயும் , மதுவர்மன் இங்கேயும் சாய்பாபா பற்றிய பிபிசியின் விவரணச் சித்திரத்தை பதிந்திருந்தார்கள். இரண்டும் ஒரே சலனப்படங்களையே கொண்டிருக்கின்றன். வாசகர்கள் ஏதாவது ஒன்றையாவது பாருங்கள்.

இங்கே அதில் வரும் ஒரு காட்சி வெவ்வேறு கோணங்களில் குறைந்த வேகத்தில் காட்சிப் படுத்தப்படுகின்றது.



காட்சியை வடிவாக உற்று நோக்குங்கள். அவர் லிங்கத்தை அந்த கைத்துண்டில் வாயிலிருந்து எடுப்பதாகப் பாவ்லா காட்டும்போது வாய் திறக்கவேயில்லை. மேலும் அவர் மேலேயுள்ள கைவிரல்களுக்குள் லிங்கம் வாயிலிருந்து வந்ததுபோல செய்திருந்தாலும் பின்னர் உள்ளங்கைப் பகுதியிலுள்ள துண்டிலிருந்தே லிங்கத்தை எடுக்கிறார்.

ஏற்கனவே கைத்துண்டில் லிங்கத்தை வைத்துவிட்டு வாயிலிருந்து எடுப்பதுபோல் என்னமாய் கப்ஸா விடுகிறார் கடவுள்.