நா
Showing posts with label சிலாகித்தல். Show all posts
Showing posts with label சிலாகித்தல். Show all posts

தேவையான பொருட்கள் :-
உழுத்தம் பருப்பு 100 கிராம்

மாவு 1/2 கிலோ
தே.எண் or ம.க.எண் 1/2 போத்தல்
உப்பு 1 மே கரண்டி
காலிமிரிஸ் 3 தே.கரண்டி
பெ,சீரகம் 1 தே.கரண்டி
கறிவேப்பிலை 15 நெட்டி

உழுத்தம் பருப்பை 2 மணி நேரம் உறவைத்துப் பின் வடித்துக் கொள்ள வேண்டும். மாவை அரித்து அதனுள் உப்பைச் சேர்த்து நன்றாகக் கையால் சேர்க்கவேண்டும். கறிவேப்பிலையை சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும். கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெ.சீரகம் மூன்றையும் மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். பின்பு உழுத்தம் பருப்பைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கலக்க வேண்டும். ரொட்டிப் பதம் வரும்வரை அடித்துக் குழைக்கவேண்டும். அதன்பின்பு லட்டு உருண்டையளவு உருட்டி ஒரு தட்டில் போடுங்கள். பிளாஸ்ரிக் மூடி (வடையளவு) ஒன்றை எடுத்து அதன் மேல் துளி எண்ணை பூசி உருண்டையை வைத்து இரு கைப் பெருவிரல்களால் தட்டையாகச் செய்யவேண்டும். செய்யும்போது வலது பெருவிரலால் எண்ணையில் தொட்டு உருண்டை மேல் தொட்டுவிட்டுத் தட்டையாக்கினால் சுகமாகத் தட்டுப்படும். தட்டியதை ஓர் தட்டில் ஒன்றுடன் ஒன்று முட்டாமல் வைக்கவேண்டும். முழுவதும் செய்த பின்பு தாச்சியில் எண்ணையை விட்டு மொறுகல் நிலை வரும்வரை பொரித்து எடுக்கவும். (சாமான்கள் போடும் போத்தல்களின் மூடி நல்லது) உப்பு, உறைப்பு போதாது விட்டால் அடுத்த தடவை செய்யும்போது கூடுதலாகச் சேர்க்கலாம். தந்த அளவில் அரைவாசியையும் முதலில் செய்யலாம். உப்பு மேசைக்கரண்டியால் மிகவும் கும்பலாக எடுக்கவேண்டாம்.
நன்றி.

அண்ணா வடை சுடுகிறார்.

பி.கு : பதிவர் சந்திப்பு இரண்டின்போது வழங்கப்பட்ட பருத்தித்துறை வடையை அம்மாதான் செய்வதாக இருந்தா. ஆனால் அவசரமாக ஊர் செல்லவேண்டிய தேவை அம்மாக்கு. என்ன செய்வது என்று யோசித்துவிட்டு இறுதியில் நாங்கள் செய்வதாக முடிவெடுத்தோம். தொடரூந்திற்கு நேரம் நெருங்கி விட்டிருந்த நேரத்தில் அவசர அவசரமாக அம்மா ஒரு காகிதத்தில் எழுதித்தந்ததுதான் இந்த வடை சுடும் முறை. வடைசுடுவதில் நான் பங்கெடுக்கவில்லை அந்தப் பதிவர் சந்திப்பின் அதிகார பீட உறுப்பினர்களில் ஒருவராக நான் இருந்ததால் வேலை அதிகம் இருந்தது. அண்ணா மதுவர்மன்தான் பங்கெடுத்தார்.

இந்த வடை சுடும் முறையை ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போது சந்தோசமும், சிரிப்பும் வரும்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ | cowboymathu

 

இந்த சூடு விழுகின்ற சங்கதிகளை இந்தியாவிலும், இந்தியச் சினிமாக்களிலும்தான் பார்த்திருக்கிறோம். இனி இலங்கையிலும் இதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்பதில் கொஞ்சம் மகிழ்ச்சிதான் (??).

அவசரமாக காலி வீதிக்குப் போகவேணும் எண்டாலும் குறைந்தது 60 ரூபா அழவேண்டும் முச்சக்கரவண்டிக்காரர்களுக்கு. இந்தியா சினிமாவின் தாக்கத்தால் தமிழர்களிடையே ஆட்டோ என்ற சொல் பாவனையில் இருந்தாலும் இலங்கையில் திறீவீலர் என்றுதான் எல்லாரும் சொல்வார்கள். சிங்களவர்களிடையே ஆட்டோ என்றால் அவர்களுக்கு விளங்காது.

குறைந்தது 60 ரூபா, கொஞ்சம் கூடத்தூரம் போனால் 100 ரூபா, வெள்ளவத்தையில இருந்து பம்பலப்பிட்டி முடிவுக்குப் போனால் 150 ரூபா என்று முச்சக்கரவண்டியில் இருந்து போகும்போது மனம் அமைதியாகப் போனதே கிடையாது. வழமையான முச்சக்கரவண்டி எனின் கதைச்சுப் பேசி குறைச்சுக்கொள்ளலாம். சிங்களத்தில அதுவும் கடினம். நான் கூடுதலாக நடைதான். காசும் மிச்சம் உடற்பயிற்சியும் ஆகுது.

மனசுக்குக் கேட்கச் சந்தோசமாக இருக்கிறது. தற்போது இலங்கையிலும் மீட்டர் போட்ட முச்சக்கரவண்டிகள் பாவனைக்கு வந்துவிட்டன. வழமையாக முச்சக்கரவண்டிகள் நிறுத்தத்தில இருந்து வீடுவாறதுக்கும் ஒரு காசு போட்டு, பிறகு போற இடத்துக்கும் அறாவிலையில (கொடுத்துப் பழகியதால் தெரிவதில்லை) காசு போட்டு அவன் இரண்டு மாசத்தில முச்சக்கரவண்டி வாங்கின காசை எடுத்துவிடுவான். இப்போது பரவாயில்லை. விளம்பரத்தைச் சுட்டிய மயூரேசனுக்கு குட்டி நன்றி.


சும்மா பகிடிக்குத்தான் யாராவது இதை உருவாக்கினார்களோ என்று கடைசியாக இருக்கிற அப்பிள் டக்ஸிக்கு தொலைபேசிக்கேட்டேன் இன்று.

சிவந்த அப்பிளின் இனிமையான குரலில் ஒரு பெண் "ஹலோ.. அப்பிள் டக்ஸி" என்றாள். அந்தக் குரலுக்கு மீட்டர் போடாவிட்டாலும் அவர்களுடைய முச்சக்கரவண்டியில் போகலாம். எனினும் விசாரித்துப் பார்த்தேன்.

உண்மைதான். தொலைபேசினால் வீட்டுக்கு வருகின்றார்கள், பெண்ணல்ல... முச்சக்கரவண்டி. அண்மைய டக்ஸி சேவை குறைந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து சேர்வார்களாம். சூடு போடமாட்டார்கள் என்று நம்புவோம்.

ம்ம்ம்.. என் உடற்பயிற்சி குறையப்போகின்றது போல் தெரிகின்றது.

 

நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு கொழும்பு, வெள்ளவத்தை, தேசிய கலை இலக்கியப் பேரவையில் இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு நிகழவிருப்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இல்லாவிடின் படத்தைச் சொடுக்கி விபரம் அறிக.


சந்திப்பிற்கு வரும் பதிவர்கள் அமைப்புக்குழுவின் உறுப்பினராகிய கங்கோன் கோபியைப் பற்றித் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

1. கங்கோன் ஒரு கொள்கை வீரன் - இவர் வலையுலகிற்கு kanagagopi(at)gmail.com என்ற முகவரியூடுதான் அறிமுகம் எனினும், அனாயதேயமாக பின்னூட்டம் போடக்கூடாது என்ற கொள்கையால் bloggergopi(at)gmail.com என்ற முகவரியைப் பாவித்துத்தான் வேறு பெயரில் பின்னூட்டமிடுவார்.

2. கங்கோன் ஒரு கிரிக்கட் புலி - ஆளைப்பார்த்தா கிரிக்கட்டுக்கு அம்பயராத்தான் நிக்கமுடியும் என்று யோசித்தா அது உங்கட தப்பு. அண்ணன் மூன்று நான்கு நாளைக்கொருமுறை கிரிக்கட்டில 61, 61 ரண்களாக விளாசித்தள்ளுவார்.

3. கங்கோன் ஒரு மாய மனிதன் - ஆகா இவராவது மாயமாக ஆவதாவது. இவருக்குப் பின்னால ஆயிரம்பேர் மாயமாகலாம் என்கிறீர்களா? ம்ஹீம்... அண்ணன் பிரத்தியேக காரணங்களுக்காக Invisible ஆகத்தான் இருப்பார்.

4. கங்கோன் ஒரு பாரம்பரியக் காவலன் - அன்றைய காலங்களில் பிரியமானவருக்கு ( ஆரம்பத்தில் ) கடிதம் எழுதுவதும் கசக்கி எறிவதுமாக எத்தனையோ தாள்களை வீணாக்குவார்கள். அவ்வாறே இணையத்தையும் பாரம்பரியம் மாறாது அஞ்சல் எழுதுவதும் அதை Draft இல் போடுவதுமாய் இருப்பார்.

5. கங்கோன் ஒரு ஆங்கிலக் கனவான் - ஆங்கிலத்தில் ஏலவே விண்ணன் என்றாலும் இன்றும் ஆங்கிலத்தில் கட்டுரைகள், கடிதங்கள், போட்டிகள், பயிற்சிகள் என்று ஏதாவது செய்துகொண்டே இருப்பார். அவருடைய விருப்பமான ஆங்கிலத் தளம் http://www.parapal-online.co.uk/eap.htm

6. கங்கோன் ஒரு பெரீய்ய ரூவீற்றர் - என்னதான் ருவிற்றர் இருந்தாலும் நான் BigTweet தான் பாவிப்பேன் என்று அடம் பிடிக்கும் அண்ணல் இவர்.

7. கங்கோன் ஒரு சமூக விலங்கு - சமூகத்தோட ஒன்றி வாழவேண்டும் என்ற வெறியால் twitter, gmail, chat, blogger, sms (www.smsgupshup.com) என்று எல்லாவற்றையும் ஒருசேரப் பாவித்து மூழ்கி முத்தெடுப்பவர்.

8. கங்கோன் ஒரு அநாமதேய ஆப்பாளர் - யாராவது அவரது வலைப்பதில் அநாமதேயமாக பின்னூட்டம் போட்டால் அவ்வளவுதான். IP tracer ஐ வைத்து அடுத்த நிமிடமே ஆப்படிப்பார்.

9 கங்கோன் ஒரு SLS தரமுடையவர் - தனது status கள் google chat ல் வேறாகவும், facebook இல் வேறாகவும் மற்றும் இதர தொடர்புகளில் வேறாகவும் இருக்கக்கூடாது என்பதற்காக Hellotxt இனைப் பாவித்து தனது தரத்தை சமநிலையில் வைத்திரு்ப்பார்.


படம் சொடுக்கி விபரம் அறிக

பிற்குறிப்பு 1 : Bavan, சந்துரு நீங்கள் எப்ப chat இனை விட்டுப் போறீங்களோ அப்பதான் கங்கோன் Visible இற்கு வருவார்.

பிற்குறிப்பு 2 : கங்கோன் பற்றி உங்களால மேலும் ஏதாவது எழுத முடியுமெண்டா பின்னூட்டத்தில் குதற இடமளிக்கப்படுகிறது. ஆனாலும் பார்த்துச் செய்யுங்கோ.

பிற்குறிப்பு 3 : இவ்வகையான சுபாங்கத்தனமான பதிவொன்றை சுபாங்கனும் தனது வலைப்பதிவில் இட்டுள்ளார்.

பிற்குறிப்பு 4 : இது நானாக எடுத்தது அல்ல அண்ணன்தான் தந்தவர் http://yfrog.com/enevidence1j

வேற என்ன, கலக்குங்கோ கலங்குஙகோ.. அப்படியே பதிவர் சந்திப்பிலும் கலக்குவம்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ. | கௌபாய்மது

 

ரீடர்ஸ் டைஜஸ்ட் என்பது நீண்ட காலமாக வெறும் கனவாகவே என்னுடன் இருந்து வந்துள்ளது. மாதா மாதம் எனது குடும்பம் அனுப்பும் காசில் முந்நூறு ரூபாவுக்கு ரீடர்ஸ் டைஜஸ்ட் வாங்குவதென்பது இயலாத விடயமாகவே இருந்தது. இப்போது வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டேன். முதல் மாதச் சம்பளத்திலேயே ரீடர்ஸ் டைஜஸ்ட் வாங்கிவிட்டேன்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

ஜூலை மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் அருமையான ஒரு கட்டுரை. "The Power of Sleep" என்று துறை போந்த வல்லுநர்களால் ஆராயந்து பெற்ற முடிவுகளைக் கொண்டு முறையான நித்திரை எப்படி ஒருவனை(ளை) கவர்ச்சியாக, உடல் வாகாக மற்றும் உறுதியாக வைத்திருக்கும் என சொல்லியிருக்கிறார்கள். இரவில படுக்கைக்கு 4 மணித்தியாலங்களுக்கு முன்னரே சாப்பிடுங்கள் அதுவும் சோற்றைச் சாப்பிடுங்கள் என்று கூறுயிருக்கிறார்கள் (இன்னும் என்னென்னவெல்லாம் கூறியிருக்கிறார்கள் என்று எழுதினால் காப்பிரைட் சட்டம் என்மீது பாயலாம்). நல்லதொரு கட்டுரை. வேலை முடிந்து அந்தத் தூக்கம் பற்றிய கட்டுரையை நான் வாசிக்கும்போது நேரம் நடுநிசி தாண்டி இரண்டுமணியாகிக்கொண்டிருந்தது.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

விமர்சனங்கள் கூறுவதிலிருந்து படத்தின் பின்னே கிடக்கும் அந்த உண்மை புரிந்துவிட்டது. குசேலன் நட்பின் வீரியத்தைக் காட்டும் படம். பசுபதி - ரஜினி நட்பல்ல; கமல் - ரஜினி நட்பு. ஒரு சினிமாவுக்குப் பின்னால் நிஜ நட்பொன்றின் வலிமை கண்டு சிலாகித்தேன். ரஜினி தனது கமலுடனான நட்பைப் பாராட்டும் முகமாக; தசாவதாரம் 100 நாட்கள் கடந்தும் ஓடவேண்டும் என்பதற்காகவும், குசேலன் தசாவதாரத்தின் வரப்போகும் நாட்களின் வசூலை எந்தவித்திலும் பாதித்துவிடக்கூடாது என்பதற்காகவும் மிகவும் சிரத்தையுடன் குசேலனை ஒழுங்குபடுத்தியிருக்கிறார். ரஜினியின் மகோன்னத மனத்திற்காக தசாவதாரம் இன்னொரு முறை பார்க்கப் போகிறேன்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

தமிழ்99 வடிவம் இலங்கை தமிழ் வல்லுனர்களால் ஆராய்ச்சிக்குட்டபடுத்தப்பட்டுள்ளது. நாங்கள் சாதாரணமாக எழுதுவதுவதிலிருந்து தமிழ்99 தட்டச்சல் வேறுபடுவதால் ஏற்றுக்கொள்ளக்கூடாது என ஆரம்பக் கருத்துக்கள் வந்துள்ளன. உதாரணமாக "நான் தமிழ்99 முறையிலேயே தட்டச்சுகிறன்" என ஊற்றுப் பேனாவொன்றால் ஒரு தாளில் எழுதவேண்டியதை " நஆனஃ தமஇழஃ99 மஉறஐயஇலஏயஏ தடடசசஉகஇறஏனஃ" எனத் தட்டச்சவேண்டியுள்ளதென்பதே அவர்கள் வாதம். நாம் சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் வேறுபாடென்கிறார்கள். மேலும் சீன மற்றும் ஜப்பானிய எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சுகிறார்கள் என ஆராயவிருக்கிறார்கள். நல்ல முடிவுகள் வந்தால் மாறுவோம்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

வால்ட் டிஸ்னி-பிக்ஸாரின் கலக்கும் அனிமேஷன் குறும்படம் ஒன்றை பிரேம்குமாரின் வலைப்பூவி்ல் பார்த்தேன். மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அருமையான படம். தரவிறக்கி வைத்துள்ளேன். பார்க்காதவர்கள் மறக்காமல் ஒரு முறை பார்த்துச் செல்லுங்கள் இங்கே

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

மதுவதனன் மௌ.

 

மாலைப்பொழுதா, காலைப்பொழுதா அனுமானிக்க முடியவில்லை. ஆனால் இது ஆறு சிறுவர்களுக்கும் ஆனந்தப்பொழுது, அனுபவிக்க முடிகிறது. இந்த ஆறு சிறுவர்களும் நண்பர்களாகத்தான் இருப்பார்கள்; எங்கோ ஒன்றுகூடி இங்கே வந்திருப்பார்கள்; ஆனால் ஒருவன் மட்டும் முன்னதாகவே ஆற்றுக்குள் குதித்து விட்டான்.


(மவுஸ் சுட்டியை படத்தின்மேல் கொண்டுவந்து சிறிது நேரம் வைத்திருங்கள்)

இது நீங்களும் கடந்து வந்த பருவம்தான். இந்த மனோநிலை உங்களுக்கும் இருந்திருக்கும். சிறுவர்கள் ஏதாவதொன்று செய்யும்போது, யார் முதலில் செய்கிறார்களோ அவர்தான் அந்தநேரத்து ஹீரோ.

நான் அன்று ஒருநாள் என்னுடைய வீட்டக்கு முன்னால் இருக்க்கின்ற மைதானத்தில் இரண்டு சின்னப் பையன்களுக்கு லன்ச் சீற்றில் பரசூட் விட்டுப் பழக்கிக்கொண்டிருந்தேன். அப்போது அந்த வீதியால் ஐஸ்கிரீம் வண்டி ஒன்று மணியடுத்துக்கொண்டு வந்தது. இரண்டு பையன்களும் மற்றவரின் முகத்தை மாறிமாறிப் பாத்தார்கள். ‘ஐஸ்கிரீம் வாங்கித்தாங்கோ’ என்று என்னிடம் கேட்போம் என்றுதான். இறுதியில் சின்னப்பையன் சொன்னான் ‘அங்க ஐஸ்கிரீம் வண்டில் போகுது’. எனக்கும் தெரியும் அவ்வீதியால் ஜஸ்கிரீம் வண்டி போகின்றதென்று, ஆனாலும் அவன் கூறியதன் அர்த்தம் தங்களுக்கு வாங்கித் தாங்கோ என்பது புரியாமலா இருக்கும்.

சரியென்று அவன்களுக்கு இரண்டு வாங்கிக்கொடுத்தேன். அவர்கள் அதைச்சுவைத்துக் கொண்டிருந்தவேளை சின்னப்பையன் கூறினான் “நான்தானே முதல்ல சொன்னனான் ஜஸ்கிரீம் வண்டி போகுது என்று”. பெரியவர்கள் இவ்வாறு கூறினால் அது நிச்சம் ஒரு கேலிக்கூத்தே. ஆனால் சிறுவர்களுக்குள் இவ்வாறு யார் முதற்காரணம் எனப்போட்டி நிலவுவது வழமையானதும் ரசிக்கக்கூடியதுமாகும்.

மேலே படத்தில் அழகாக பதிவாக்கப்பட்ட இரம்மியமான சூழ்நிலையுடன் சிறுவர்களின் அந்த இரசிக்கத்தகு மனோபாவமும் பதிவாக்கப்பட்டிருப்பதுதான் அருமை (மேலே பாயும் ஐந்து சிறுவர்களை விடவும் கீழே ஒருவன் முன்னதாகவே பாய்வது உங்கள் கலைக்கண்களுக்குத் தெரிகிறதுதானே!). ஒரு பையன் நிர்வாணமாகக் குதிப்பது மேலும் சூழ்நிலையை இரசிக்கத்தக்கதாக ஆக்குகிறது. இந்தவயதில் ஆபாசமாகத் தெரியாத நிர்வாணம், வயது வரவர ஆபாசமாகத் தெரிவது இயற்கையாலா அல்லது மனிதர்களின் நடத்தையாலா?