நா
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

பாலியல் வல்லுறவும் ஆண்களும் (மூன்று)





நம்பிக்கை ஐந்து : கர்ப்பம் தரிக்கும் அபாயம் இருப்பதைத் தவிர, பெண்களைப்போல ஆண்கள் தங்கள் மீதான பாலியல் வல்லுறவில் பாதிக்கப்படுவதில்லை.



விளக்கம் : பால் ரீதியான பாதிப்பாக பெண்கள் கர்ப்பம் தரித்தலை தவர்த்து, ஆண்களும் தங்கள் மீதான பாலியல் வல்லுறவின்போது பலவழிகளில் பாதிக்கப்படுகிறார்கள். சிலவேளைகளில் பெண்ணிலும் அதிகமாக.

ஆணொருவர் ஆணை பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கும்போது மிக அதிகமான வன்முறை பாவிக்கப்படுகிறது. பெண்கள் மீதானதைப் போலன்றி ஆண்கள் மீதானதில் ஆயுதங்களும் பாவிக்கபடுகின்றன. அதிக இடங்களில் பலர் சேர்ந்து ஒரு ஆணை வல்லுறவுக்காளாக்குவது அதீத பாதிப்பை ஏற்படுத்துகின்றது பல வேளைகளில் அது தற்கொலைக்கான முடிவையும் தந்துவிடுகிறது.

ஆண்கள் மீதான வல்லுறவு அதிகமாக குதவழியினூடானதாக இருப்பதால் விளைவாக குதவழி உட்கிழிவு அல்லது காயம் ஏற்படுகிறது. இது எச்.ஐ.வி தொற்றுக்கான சாத்தியப்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் Rape trauma syndrome என்படும் வல்லுறவின் பின்னான அவரைச் சுற்றியிருப்பவர்களையும் தொடர்ந்து கவலையிலாழ்த்தும் விளைவுக்கு உள்ளாக நேரிடுகிறது. Rape trauma syndrome http://en.wikipedia.org/wiki/Rape_trauma_syndrome ஆனது ஆண் பெண் இருவருக்குமே பொதுவான விளைவுகளையே தருகின்றது. இது பற்றிப் பிறிதொரு பதிவில் பார்ப்போம்.

தொடர்ந்து செல்லும் விளக்கங்களுக்கிடையில் அனுபவம் ஒன்றையும் பார்த்துவிடுவோம்.

எனது நண்பரொருவன் என்னிலும் ஆறேழு வயது கூடியவர், அவர் தனது பதின்ம வயதில் இருக்கும்போது காவற்துறையினரால் புலிச் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் சிறையிலிருந்தவர். அதன்போது அவர் முதன்முறை சிறையிலிந்த சிலரால் வல்லுறவுக்காளாகியிருக்கிறார். இரண்டாம் முறையும் காவலாளியிடம் பணம் கொடுத்துவிட்டு இவரது சிறைக்கூண்டுக்குள் வெளி நபர் ஒருத்தர் வரும்போது இவர் வேண்டுமென்று அணிந்திருந்த காற்சட்டையுடன் மலம் கழித்துவிட்டார். வந்தவர் இவரை நையப்புடைத்துவிட்டு திரும்பிச் சென்றுவிட்டார். (அவர் இப்போது என்ன செய்கிறார், எங்கே இருக்கிறார் என்பதெல்லாம் இப்பதிவுக்குத் தேவையில்லாததாகையால் தேவைப்படும்போது இன்னொரு தருணத்தில் கதைக்கிறேன். ). அதாவது ஆண்கள் மீதான ஆண்களின் வல்லுறவானது அதிகமாக குதவழியை நோக்கியதாகவே இருக்கிறது.


ஆண்கள் மீதான பாலியல் வல்லுறவானது சிறைக்கூடங்கள், இராணுவக் கட்டமைப்புக்கள், விடுதிகள் போன்ற இடங்களில் அதிகரித்த நிலையில் உள்ளன.

சரி அடுத்த நம்பிக்கையையும் அதற்கான விளக்கத்தையும், இருந்தால்
அதுசம்மந்தப்பட்ட அனுபவங்களையும் இன்னொரு பதிவில் பதிகிறேன்.




பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

பாலியல் வல்லுறவும் ஆண்களும் (இரண்டு)
பாலியல் வல்லுறவும் ஆண்களும் (ஒன்று) இற்கு இங்கே செல்லுங்கள்.

நம்பிக்கை நான்கு: வயதுவந்த ஆணொருவர் பெண்ணால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக முடியாது.
விளக்கம் : பாலியல் வல்லுறவு நிகழ்வுகளில் 97 வீதமானவை ஆண்களால் நிகழ்த்தப்பட்டவையாக இருந்தாலும் பெண்களால் செய்யப்பட்ட வல்லுறவுகளும் பதிவுகளில் உள்ளன. பெண்களும் பாலியல் வல்லுறவை நிகழ்த்தியிருக்கிறார்கள்; நிகழ்த்துகிறார்கள்.
இங்கே குறிப்பிடப்படவேண்டிய விடயம் ஒன்றுளது. அதாவது பெண்களால் வல்லுறவுக்காளாக்கப்படும் ஆண்கள் அதை வெளியில் சொல்வதில்லை. சொன்னால் தாங்கள் கோழைகள் ஆகிவிடுவோமோ என நினைக்கிறார்கள்.
குறிப்பிட்ட இந்நிகழ்வுகளில் பாலியல் வல்லுறவுக்காளாக்கிய பெண்ணே ஆணை ப்ளாக்மெயில் செய்ய ஆரம்பிக்கிறாள். இதை வெளியில் கூறினாயானால் நீதான் என்னை வல்லுறவுக்குள்ளாக்கியதாக கூறிவிடுவேன் என்கிறாள். அதனால் இவ்வகை வல்லுறவுகள் பதிவுகளில் வருவதில்லை.
இவ்வகைக் நிகழ்வுகள் கிராமப் புறங்களைவிட நகரங்களிலும் மேற்குலக நாடுகளிலுமே அதிகமாக உள்ளது. இதன் போது ஆண் தனது பாலுறுப்பை பெண்ணினுள் செலுத்தவேண்டுமென்றில்லை. பெண் ஆண் மீது அதிர்வுக் கருவிகளை பாவிக்கிறாள்.
ஒரு பெண் பலவந்தமாக ஆணுறுப்பினை விறைப்புத்தன்மை ஆக்கமுடியாது என நினைக்கிறீர்களா? ஒன்றை யோசித்துக்கொள்ளுங்கள், ஆணாக நீங்கள் உங்கள் பாலுறுப்பின் மீது மிக மிகக் குறைந்த கட்டுப்பாட்டையே வைத்திருக்கிறீர்கள் அல்லது உங்கள் உடலில் நீங்கள் கட்டுப்படுத்த முடியாத பகுதிகளில் ஒன்றாக உங்கள் ஆணுறுப்பும் உள்ளது.
உதாரணத்திற்கு டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த இந்தச் செய்தியை வாசித்துப் பாருங்கள். மூன்று பெண்மணிகள் ஒரு ஆணை கடத்திப் பாலியல் வல்லுறவுக்காளாக்கிய சம்பவம் பற்றியது..
பி.கு: நம்பிக்கைகளும் விளக்கங்களும் தொடரும். நேரம் இருக்கும்போது பதிகின்றேன்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

பாலியல் வல்லுறவும் ஆண்களும் (ஒன்று)
பாலியல் வல்லுறவு என்ற சொல்லைவிட கற்பழிப்பு என்ற சொல்லையே அதிகம் கேட்டிருப்போம்; கேட்டுக்கொண்டிருக்கிறோம். பத்திரிகைகளும் மலிந்து கற்பழிப்பு என்ற சொல்லையே பிரதானமாகப் பயன்படுத்துகின்றன. கற்பு(??) என்பது பெண்ணுக்குரியது, ஒரு பெண்தான் கற்பழிக்கப்படலாம் என ஆண்டாண்டு காலம் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறோம். முன்னைய வரியை காரண காரியங்களோடு சிந்தித்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வரும். நான் சொல்ல வந்தது இதுவல்ல. நாம் எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கும் சிலவற்றைத் தவறானதென்கிறேன். மேலும் இவற்றை அறியவேண்டிய தேவையும் இருப்பதால் இங்கே கூற விளைகிறேன்.

நம்பிக்கை ஒன்று : ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதில்லை.
விளக்கம் : ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக முடியும்; ஆளாகிறார்கள். ஆண்களின் தோற்றம், தொழில், உருவம், பலம், இனம், பாலியல் விருப்பு வெறுப்பு என்னவாக இருந்தாலும் அவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படலாம். இராணுவத்தில், சிறையில், பூட்டிய அறையில், பொது கழிப்பிடங்களில், தொழில் செய்யும் இடங்களில், விடுதிகளில் என்று எங்குமே ஒரு ஆணின் மீதான பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்படலாம்.
ஆண்களின் மீதான வல்லுறவின் போது, வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் ஆண், பெண்கள் காட்டும் எதிர்ப்பைக்கூட காட்டாததான நிகழ்வுகளே அதிகம் உள்ளன. அல்லது அவன் எதிர்ப்பைக்காட்ட முடியாத அளவுக்கு உறைந்து போய்விடுகிறான் இவ்வாறான் ஒன்றை எதிர்பார்க்காததால்.

நம்பிக்கை இரண்டு : ஓரினச் சேர்க்கை (Homo-sexual) ஆண்கள் மட்டுமே பாலியல் வல்லுறவுக்கு உட்படுகின்றனர்.
விளக்கம் : ஓரினச்சேர்க்கை ஆண்களே பாலியல் வல்லுறவு செய்பவர்களின் அல்லது அந்த மனநிலையில் இருப்பவர்களின் அதிகமான இலக்காக இருக்கின்ற போதிலும் எதிரினச் சேர்க்கை (Hetro-sexual) ஆண்களும் பலவலாக பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுகிறார்கள். பாலியல் வல்லுறவுக்கு உட்படும் ஆண்களில் 40 வீதமானவர்கள் எதிரினச் சேர்க்கை ஆண்களே.

நம்பிக்கை மூன்று : ஓரினச் சேர்க்கை ஆணொருவரே இன்னொரு ஆணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவார்.
விளக்கம் : ஆண் பாலியல் வல்லுறவு புரிந்த ஆண்களில் பலர் எதிரினச் சேர்க்கை ஆண்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். எதிரினச் சேர்க்கை ஆணொருவர் ஒரு பெண்ணையோ ஆணையோ பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும்போது அவர் தான் பெண் மீது வன்புணர்வதாகவே யோசித்துக்கொள்வார். மேலும் ஆண்கள் மீதான் வல்லுறவின் போது அவரது மேலாதிக்கமும் அதிகமாக இருப்பதாக சந்தோசம் கொள்வார்.
இங்கே ஒரு கருத்துத் தெளிவாகிறது. அதாவது பாலியல் வல்லுறவு என்பது அதிகமாக கோபம், மேலாதிக்கம், கொடூரம், கட்டுப்படுத்தல் என்பவற்றுடன் சிறிதளவு பாலியல் உணர்வாலுமே நடக்கின்றது.

பாலியல் வல்லுறவும் ஆண்களும்(இரண்டு)
பி.கு: நம்பிக்கைகளும் விளக்கங்களும் தொடரும். நேரம் இருக்கும்போது பதிகின்றேன்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

தன்னையே எரித்துக் காவியமாக்கிய முத்துக்குமரனின் சம்பவம் பற்றிய சிங்கள மக்களின் கருத்துக்களை இலங்கையில் வெளிவரும் இணையப் பத்திரிகையில் பின்னூட்டங்களாகப் பாருங்கள். அவை ஆங்கில மொழியில் இருப்பதுடன் பின்னூட்டமிட்டவர்களில் சிலர் தமிழர்களும் அடங்குவர்.
இங்கே சென்று பார்க்க.  http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=39113



 


டயலொக் கிட்ஸ் (Dialog Kidz)
இலங்கையில் டயலொக் ரெலிகொம் நிறுவனம் தற்போது புதிய செல்பேசி இணைப்புவகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் Dialog Kidz. இது சிறுவர்களுக்கானது ஏனெனில் இணைப்பு வயதுவந்தவர்களின் குறிப்பாகப் பெற்றோரின் பெயரில்தான் இருக்கமுடியும் என்பதுடன் வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் அழைப்புக்களுக்கான தொலைபேசி இலக்கங்கள் இணைப்பின் சொந்தக்காரரால் மட்டுப்படுத்தப்பட முடியும் அத்துடன் அவ்விணைப்புக்கு வரும் குறுந்தகவல்கள் அனைத்தையும் இணைப்பின் சொந்தக்காரர் அதாவது பெற்றோர் தமது செல்பேசியூடாகப் பெறமுடியும்.

ஒருவகையில் தடுமாறும் வயதில் செல்பேசிகளால் திசைமாறும் சிறுவர்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க பெற்றோருக்கு வழிவகை செய்யதால் டயலொக்கிற்கு நன்றி கூறலாம்.

ஆண்கள் தங்கள் காதலிகளுக்கு (ஆண்கள் பன்மையாகையால் காதலிகள் எனப் பன்மை வரவேண்டியதாயிற்று) இந்த இணைப்பை வாங்கிக் கொடுத்தால் என்ன என இப்போது சிந்திக்கத் தலைப்பட்டிப்பார்கள்


குசேலப்பிரபு
குசேலன் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை (பொறாமைத்தீ கொழுந்துவிட்டெரிவது தெரிகிறது). ஒரு சில காட்சிகளை யூடியூப் பார்க்க வழிவகை செய்தது. பிதுங்கி வழியும் பிரபுவைப் பார்க்க பாவமாக இருந்தது. விரலுக்கேத்த வீக்கம் இருக்கவேணும்.

பில்லா (புதியது) திரைப்படம் நான் மிகவும் இரசித்துப் பார்த்த படங்களில் ஒன்று. பழைய பில்லா, பழைய டொன், புதிய டொன் என ஒன்றையும் நான் முதலில் பார்த்திருக்கவில்லை. அத்துடன் ரகுமான் பில்லாவி்ல் வில்லன் என்பது அவர் படத்தில் வெளிப்பட்ட பின்னர்தான் தெரியும். ஆகவே ஆங்கிலப் படமொன்றைப் பார்த்த திருப்தி.

அதைவிட இப்போது அதிக திருப்தி பில்லாவில் பிரபு மண்டையைப் போட்டதுதான். இல்லாவிடின் பில்லா 2 இல் வந்து தானும் பிதுங்கி எங்களையும் விழிபிதுங்க வைத்திருப்பார்.


வேர்ட் 2007ஐ பார்ப்பது எப்படி?
நீங்கள் ஏதாவதொரு இடத்தில் பாவிக்கும் கணிணியில் இணைய இணைப்பும் இல்லை வேர்ட 2007 உம் இல்லை. ஆனால் வேர்ட் 2007 கோப்பொன்றை எவ்வாறு பார்வையிடுவது. இதோ அதற்கான வழி.

1. கோப்பின் extensionஐ zip என மாற்றுங்கள். அதாவது கோப்பு hello.docx இனை hello.zip என மாற்றுங்கள்.
2. Winzip, Winrar அல்லது உகந்த மென்பொருள் கொண்டு unzip (extract) செய்யுங்கள்.




3. extract செய்ய folder இனுள் word எனும் folder இருக்கும். அதனுள் document.xml எனும் கோப்பிருக்கும். அதனை document.html என மாற்றுங்கள். இப்போது அதனை பயர்பாக்ஸிலோ அல்லது வேறு உலாவியிலோ திறந்து பார்த்து ஆரம்ப வேர்ட் 2007 கோப்பின் உள்ளடக்கங்களைப் பாருங்கள்.கோப்புக்கள் பற்றிய விளக்கப் படம்


வேர்ட கோப்பில் படங்கள் ஏதாவது இருந்திருந்தால் அவை media எனும் folder இனுள் இருக்கும்.


folder, unzip மற்றும் extension என்பவற்றுக்குரிய இந்தப் பதிவிற்குப் பொருந்தக்கூடிய வகையிலான ஆங்கிலச் சொற்கள் தெரிந்தவர்களை தயவுசெய்து பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

மதுவதனன் மௌ.

 

கீழே இருக்கிற செய்தியை முதல்ல பாருங்கோ. தினமணியில் வந்தது. வாசிச்சவுடன ஏதோ கொஞ்சம் எழுதவேணும்போல இருந்தது.


(படத்தில் மவுஸை சொடுக்குங்கோ, இது வேறு பக்கததுக்குப் போகாது)

அய்யப்பனுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக்கொணடு, ரவி விரைவா குணமடையவேணும் எனவும் நினைத்துக்கொண்டு இதைபற்றி கதைக்கப்போறன்.

இந்த சம்பவம் நடந்தபின் அந்த ஊரில் யாரார் என்னென்னவெல்லாம் கதைத்திருப்பார்கள் என எண்ணுகிறேன்,

"அம்மனுக்கு ஏதோ நாம் செய்யல, குறை வந்திடு்ச்சி, அதால கொழந்தைய பலி எடுத்துட்டாங்க"

"அப்பன்காரன் போன வருஷம் அம்மனுக்கு செஞ்சிபோட்ட நகையில செப்பு கலந்துபுட்டான், சாமி புள்ளய கொண்டுபோயிடுச்சி"

"இந்த வருஷம் ஊருக்கு ஏதோ பெரிய அழிவு வரப்போவுது, அம்மன் குறி காட்டிட்டா"

"சாமிமேல பக்தி இல்லாம தீமிதிச்சா இப்பிடி ஏதாவது நடக்கும்னு சொன்னேன், கேட்டீங்களா"

நிச்சயமாக இவையும் இன்னும் வேறுவேறாகவும் அந்த ஊர் ஜனங்கள் கதைத்திருப்பார்கள். மறுப்பதற்கு யாரும் இல்லை.

தீமிதித்தல் என்பது சரியானதா? சரியானதாயினும்கூட ஒரு சிறுவயதுப் பாலகனோடு தீயுள் இறங்குவது சரியானதா? இதையெல்லாம் எங்கள் சமூகம் என்றுதான் சிந்தித்து தன்னைத் திருத்திக் கொள்ளப்போகிறதோ!

இப்பிடி தீமிதிக்கிறது பிழை, அதை நிறுத்துங்கோ என ஏதாவது சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கினால், அதற்கு மேலால் இதெல்லாம் எங்கட பாரம்பரியம், கலாசாரம், விழுமியம் என எதிர்க்கொடி தூக்க ஏராளம்பேர் உள்ளனர்.

இதெல்லாம் எங்களுக்கொரு சாபக்கேடு, வேறென்ன.