நா
Showing posts with label நிகழ்வு. Show all posts
Showing posts with label நிகழ்வு. Show all posts

பதிவர் சந்திப்பு
இந்த முறையும் பதிவர் சந்திப்பு மிக நேர்த்தியான முறையில நடாத்தப்பட்டிருக்கிறது. கடந்ததை விட சந்தித்தத அனைவருக்குமிடையில் ஏதோ ஓர் ஒற்றுமை சம்மந்தப்பட்ட பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் தெரிகிறது. ஆனாலும் சந்திப்பின் இறுதியில் பதிவர்கள் தமக்குள் கலந்துரையாடவென தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் பதிவர்கள் அவ்வளவாக அளவளாவவில்லை. செய்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும். அடுத்த அதிகார மையம் இதனைக் கவனிக்குமா?
காவற்துறையும் கூட்டங்களும்
பதிவர் சந்திப்பு நடந்துகொண்டிருந்த வேளை காவற்துறை வந்திருந்து. சிஐடியும் வந்திருந்தது. நிச்சயமாக யாரோ ஒருவர் எமது சந்திப்புக் குறித்து அவர்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். வந்தவர்கள் தமிழ் ஆக்கள் சந்தித்துக் கதைப்பதில் கூட ஆர்வம் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சந்தேகப்பட்டுக் கேட்டது 'பல்கலைக்கழக மாணவர்கள் சந்தித்துக் கதைக்கிறீர்களா' என்பதே. சிவப்புத் துண்டு பக்காவாத்தான் அசையுது.
மேலதிக வாசிப்புக்கு http://aiasuhail.blogspot.com/2010/12/blog-post_22.html
வெற்றி TV
இலங்கையில் ஒளிபரப்பாகும் வெற்றி TV இற்கு என்ன நடந்தது. ஆரம்பத்தில் TBO நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக்கொண்டு இருந்தவர்கள் இப்போது தனியே சினிமா பாடல்களும் படங்களுமாக மட்டும் ஒளிபரப்புகிறார்கள். அதுவும் ஒவ்வொரு நாளும் அதே பாடல்கள்.
இஸ்லாம் - கிறிஸ்தவம்
இணையத்தில் உலவும்போது சுவாரசியமாக இருந்தது. மேலதிகமாக வாசிக்கவில்லை. இஸ்லாம் - கிறிஸ்தவம் - யூத மதஙகள் மூன்றும் பல ஒரே இயல்புகளைக் கொண்டிருக்குதாம். இஸ்லாம் - கிறிஸ்தவ மதப் பெயர்களின் ஒற்றுமையைப் பாருங்கள்
இப்ராகிம் - ஏப்ரகாம்
பாத்திமா - பற்றிமா
ஈசா - ஜீசஸ்
மூசா - மோசஸ்
தாவூத் - டேவிட்
யூசுப் - ஜோசப்
மேலதிகமாக வாசிக்கவேண்டும்.
பட உதவி http://pagentsprogress.com

பிரியமுடன்,
மதுவதனன் மௌ | cowboymathu

 

சரத் பொன்சேகா நாளைக்கு கூட்டத்தில பேசப்போறார் எண்டு இரவோடிரவா ஆரோ கூட்டம் நடக்கவிருந்த மேடை அங்கிருந்த பதாகைகள் எண்டு எல்லாத்தையும் எரிச்சு நீலநிற ரிப்பன்களை போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்களாம்.

பனாதைப் பயலுகள். கூட்டம் நடக்கவிருந்த கிராமத்தில பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்ககாது கூட்டத்துக்கு போகாம இருப்பம் எண்டிருக்கிற சில பல சனம்கூட இதனால் கோபப்பட்டு ஆதரவு தெரிவிக்கும் என்பது எனது கருத்து.

இல்ல எதிர்க்கட்சிதான் இதையே ஒரு வழியாக கடைப்பிடிக்குதோ எண்டு மதுவுக்கு மண்டைக்குள்ள மொக்குச் சந்தேகம் வேற.
அண்ணாவுக்குத் தெரிந்த ஒருவர். நடுத்தர வயதுடையவர். அவரின்ர யதார்த்தைப் பாருங்கோ..


"உந்த ரீவியளைத் திறந்தா ஒரு சீரியல்... மண்டை வெடிக்குது.. தியேட்டருக்குப் போனா வாற படங்களைப் பாத்து மண்டை காயுது.. கொஞ்சக்காலமா எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல.. இப்ப நெடுகலும் புளூபிலிம்தான் எடுத்துப்பாக்குறனான்.. உந்தச் சீரியலுகள் படங்கள் பாக்கிறத விட புளூபிலிம் எவ்வளவோ மேல்"..

சீரியலுகளாலயும், அண்மையில் வந்த படங்களலாலயும் மனுசன் எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கவேணும் எண்டு பாருங்கோ..
நித்திரை என்பது மிக முக்கியமானது. நித்திரையிலதான் எங்கட கலங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. குறிப்பாக முளைக்கலங்கள். அடுத்தநாள் புதுப் பொலிவோட, நல்ல எண்ணங்களோட, புதுப்புது ஐடியாக்களோட இருக்கவேணுமெண்டா ஆழ்ந்த உறக்கம் அவசியம்.

எவ்வளவு நேரம் நித்திரை கொள்ளுறம் என்பது அவசியமில்லை. எவ்வளவு நேரம் தொடர்ந்து நித்திரை கொள்ளுறம் என்பதுதான் அவசியம். அரை அரை மணித்தியாலமா பத்துமணித்தியாலம் நித்திரை கொள்வதில ஒன்றுமே இல்லை. ஆறரை மணித்தியாலம் தொடர்ந்து கொள்வதில முழுப் பயனும் பெறலாம்.


இந்தக் கணினி உலகில நித்திரை சீரின்மை என்பது பெரியொரு பிரச்சினை. நீங்கள் எப்படி?. இங்க போய் பரீட்சித்தப் பாருங்கோ. பிபிசியின் சுட்டி. பயப்படாது தகவல்களை தட்டச்சுங்கோ. உங்களுடைய வாழக்கைமுறை நித்திரைக்குப் பங்கம் விளைவிக்குதா, அதை எப்படி ஒரளவு சீராக்கலாம் என்று இறுதியில் சிறு குறிப்பு என்று நல்ல விடயங்களைச் சொல்லுது.


http://www.bbc.co.uk/science/humanbody/sleep/profiler/

எனக்கு ஒரளவு பரவாயில்லை எண்டு சொல்லுது. என்ர நண்பர் பனர்ஜி நிமலுக்கு நீ ஒரு ஆந்தை எண்டு சொல்லிப்போட்டது.

நித்திரைக்கு முதல் செக்ஸ் வச்சுக்கொள்ளுவீங்களோ எண்டெல்லாம் கேக்குது. கல்யாணம் கட்டினாக்கள்தான பதிலளிக்கவேணுமெண்டில்லை. போய் நீங்களும் ஒருக்கா பரிசோதித்துப் பாருங்களேன்.

படத்தைச் சொடுக்கிப் பாருங்கோ

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

 அச்சுவலை - அச்சோ ஒரு கவலை

எவரும் மறந்திடவேண்டாம்

மீண்டும் சந்திப்போம் சிந்திப்போம்

பூரணை விருந்து

மீண்டும் ஒரு சந்திப்பு

அச்சுவலை சந்திப்பு - நேரடி ஒளிபரப்பு

எங்கள் சந்திப்பு - எவரும் மறந்திட வேண்டாம்

இவ்வாறு எத்தனை பதிவுகள் ஆர்வமேலீட்டால் வந்திருந்தன. அதிலொன்றும் தப்பேயில்லை. இலங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பு தந்த மகிழ்ச்சியும், கன்னி முயற்சியாயினும் அதன் காத்திரமும் இன்னொரு வலைப்பதிவர் சந்திப்புப் போல அழகுறை சுற்றப்பட்ட அல்லது தப்பாக விளங்கிக்கொள்ளப்பட்ட இருக்கிறம் சஞ்சிகையின் "அச்சுவலைச் சந்திப்பு" நடந்தபின் வரும் அதைப் பற்றிய பதிவுகளி்ல் அதிகமானவை மகிழ்ச்சி தருவனவாய் இல்லை.

அச்சுவலைச் சந்திப்பின் குறிக்கோள் என்னவாக இருந்தது? அது வலைப்பதிவர்களையும் அச்சு இலத்திரனியல் ஊடகத்தினரையும் இணைத்தல். இது சாதாரணமாகச் சொல்லிவிட்டு செய்யக்கூடிய குறிக்கோள் அல்ல. இதன் நிறைவேற்றுகைக்கு மிகச் சிறப்பான ஒழுங்குபடுத்தல் தேவைப்படுகிறது. அவ்வாறானவொரு ஒழுங்குபடுத்தலை காணக்கிடைக்கவில்லை.

வலைப்பதிவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் எனும்போது இலங்கைப் பதிவர்கள் கொழும்பிலிருந்து மட்டும் வருபவர்களல்லர். இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வருபவர்கள். மூன்று நாள் தொடர்ந்த விடுமுறையை அனுபவிக்காது சந்திப்பின் காத்திரத்திற்காக பணம், நேரம், உடலசதி பார்க்காது வருபவர்கள். இதனையெல்லாம் இருக்கிறம் சிந்திக்கவில்லையா? கல்முனையிலிருந்து சக பதிவர் முதல் நாள் இரவு பயணித்து இதற்காக வந்து மாலைவரை காத்திருந்து சந்திப்புத் தொடங்கி ஒரு மணித்தியாலங்களில் திரும்பிப் போய்விட்டார். மனதுக்கு உறுத்தலாக இருந்தது.

இருக்கிறத்தின் சந்திப்பில் குறைகளைப் பற்றியே கூறவேண்டியதன் காரணம் என்ன? இச்சந்திப்பை வெளியுலகிற்குக் காட்டிய முறை பிழையானது. இதனையே "அச்சுவலைச் சந்திப்பு - வலைப்பதிவர்களையும் அச்சு இலத்திரனியல் ஊடகத்தினரையும் இணைக்கும்.." என்று வெளியுலகிற்கு காட்டாது, "இருக்கிறத்தின் கலந்துரையாடல் நிகழ்வு - வலைப்பதிவர்களும் அழைக்கப்படுகின்றர்" என்பது போலக் காட்டியிருந்தால் யாருமே குறை குற்றம் கூறியிருக்கமாட்டார்கள்.

---------------------------------------------------------------------------------------------------

இருக்கிறம் ஒரு சஞ்சிகையாக, ஒரு நிறுவனமாக அதனைத் தக்கவைத்துக்கொள்ளவோ (ஏலவே அது ஓரளவு தன்னைத் தக்கவைத்திருக்கிறது புதிதாக வந்த மற்றைய சஞ்சிகைகளுடன் ஒப்பிடும்போது) அதன் இருப்பை வெறும் காலாகாலம் வெளிவரும் சஞ்சிகையாகவன்றி ஏதோ புதுவிதத்தில் வெளிப்படுத்திக்கொள்ளவோ இன்றைய அவசர உலகில் அதிகம் கவனிக்கப்படும் வலைப்பதிவுகளை உள்வாங்கவோ அல்லது வலைப்பதிவுகளினுள் உள்வாங்கப்படவோ வேண்டிய தேவை உளது. அவ்வாறானவோர் தேவையின் சிறுபகுதி இவ்வச்சுவலைச் சந்திப்பில் பூர்த்தியாக்கப்பட்டிருக்கிறது.

இருக்கிறத்தின் இருப்பின் சிறுவரலாறு. சஞ்சிகைகள் பத்திரிகைகளின் இயல்புகள். வித்தியாதரனின் சுவாரசியமான சில அனுபவங்களும், தமிழ்மொழியின் தவறான பாவனையிலான சிறுகோபங்கள், இருக்கிறத்தின் மேம்படுகைக்கான கருத்துரைகள், இருக்கிறம் மலினப்பத்திரிகையல்ல என்றவோர் சிறுவிவாதம் மற்றும் இருக்கிறத்தினைச் சுற்றியே வந்த இதர நிகழ்வுகள் எல்லாம் எதிர்பார்த்துவந்ததினைப் பூர்த்திசெய்யத் தவறியதால் வலைப்பதிவர்களின் ஈர்ப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை.

அச்சும் வலையும் அறிமுகப்ப்படும் சந்திப்பெனின் அதுசம்மந்தமாக ஏன் எதுவும் நிகழவில்லை? எவ்வளவு அருமையான வழிகள் உளளன. சிறு சிறு சுவாரசியமிகு போட்டிகள், அச்சிலிருந்து இருவர் வலையிலிருந்து இருவர் என குழுவாகி அறிமுகத்தை ஏற்படுத்தக்கூடிய சிறு செயற்பாடுகள் போல எவ்வளவோ உளன. அச்சு அச்சாகவும் வலை வலையாகவும் இருந்ததைத்தான் காணமுடிந்தது.

---------------------------------------------------------------------------------------------------

இருக்கிறம்... நீங்கள் அடுத்தமுறை இவ்வாறானதோர் சந்திப்பை ஒழுங்குபடுத்துவதாகவிருந்தால் அதன் நிகழ்ச்சிநிரலை ஏலவே வெளியிடுங்கள். வருகையாளர்கள் உங்கள்மேல் குறையொன்றும் கூற முடியாது.

--------------------------------------------------------------------------------------------------

இருக்கிறத்தின் "அச்சுவலைச் சந்திப்பினை" ஆர்வத்துடன் எதிர்பார்த்து மிக மேல உள்ள பதிவுகளைப் போட்ட வலைப்பதிவர்கள்தான் சந்திப்பின் பின் இப்பதிவுகளைப் போடுகிறார்கள்.

தண்ணீரில் பதிவருடனான சந்திப்பு

அச்சுவலைச் சந்திப்பில் பதிவர்க(ள்/ளும்)

இருக்கிறம் ஏமாற்றியது

எமது "சந்திப்பு வறுமையும்" அச்சுவலைச் சந்திப்பும்

மிக மேலுள்ள பதிவுகளுக்கு எவ்வளவு எதிர்பார்ப்புக்களுடனும் மகிழ்ச்சியுடனும் பின்னூட்டங்கள் கிடைத்ததோ அதைவிட காட்டமாகவும், கவலையுடனும் இவற்றுக்குப் பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன். இவற்றைச் சாதாரணமாகப் புறம்தள்ளிவிட முடியாது. இருக்கிறம் நிர்வாகத்தினர் அடுத்தவோர் சந்திப்பில் இவற்றையெல்லாம் கவனத்திற்கொண்டு சிறப்புறச் செய்யவார்கள் என்று நம்புகிறேன்.

------------------------------------------------------------------------------------------------

நான் எவ்வளவுதான் மேல எழுதியிருந்தாலும் தர்ஷாயணீ லோகநாதன் மூஞ்சிப் புத்தகத்தில் போட்ட Status Message ஆயிரம் கதை சொல்லும். அது....

அச்சுவலைச் சந்திப்பு - சேறும் சகதியும்


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

நேரடி ஒளிபரப்பு - அச்சுவலைச் சந்திப்பு
இலங்கையில் (02-11-2009) திங்கட்கிழமை மாலை மூன்று மணிக்கு நடக்கவிருக்கும் அச்சுவலைச் சந்திப்பு நேரடி ஒளிபரப்பாகக் காண்பிக்கப்படவிருக்கிறது.






சந்திப்புக்கு வரவியலாதுள்ள அச்சு ஊடகம் மற்றும் வலைப்பதிவுகள் சம்மந்தப்பட்டவர்கள் நேரடியாக சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்களைப் பார்த்து அதன்போதே உங்கள் கருத்துக்களைப் பகிரக்கூடிய (Chatting மூலமாக)சந்தர்ப்பத்தை இது வழங்குகிறது.

நேரடி ஒளிபரப்பு மற்றும் எழுத்துமூல உரையாடலுக்கான சுட்டி இதோ,

www.livestream.com/srilankatamilbloggers

நேரடி ஒளிபரப்பின் அனுபவமும், அதன்மூலமான கருத்துக்களைக் கையாளும் தன்மையும் நன்றாக அமைய பங்குபற்றுபவர்களின் ஒத்துழைப்பு வேண்டப்படுகிறது.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

ஒரு பெண் - நான் - ஒரு காலியான இருக்கை
ஒவ்வொரு நாளும் வேலைக்கு பேருந்தில் செல்வதென்பது எனக்கொன்றும்
கஷ்டமாக இருப்பதில்லை. ஐபொட்டில் பாட்டக்கேட்டுக்கொண்டு வாயசைத்துப் பாடிக்கொண்டு செல்வதில் அல்லது செல்பேசியில் வெற்றியின் விடியல் கேட்டுக்கொண்டு செல்வதில் எனக்கு அலாதிப் பிரியம்.
முதுகில் சிறுவயதில் பை தூக்கியமாதிரி இப்போதும் மடிக்கணினியைத் தூக்கிக்கொண்டு செல்வதால் நண்பர்கள் சிலருக்கு வரும் களுத்துளைவு எனக்கு வருவதுமில்லை.

பேருந்தில் இருந்து செல்வதை விட இருக்கைகள் இருந்தாலும நின்று செல்வதில் ஏனோ இன்பம்.இப்படித்தான் நேற்று வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன்.இருக்கைகள் முற்றிலும் நிரம்பியிருந்தன. மூன்று பேர் இருக்கக்கூடிய இருக்கைகளை நோக்கியவாறு மேல கம்பியைப் பிடித்தபடி வெற்றியின் வியாழன் கேள்வி-பதில் நிகழ்ச்சியை இரசித்து கேட்டுக்கொண்டு சென்றேன்.

எனக்கு நேரே இருந்த இருக்கையில் ஒரு ஆண், இன்னொரு ஆண், நடுவிலே அழகான ஆம் தலைமயிரை நேராக்கி அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பறக்கவிட்டபடி அழகான ஒரு பெண்.

சிறிது தூரம் சென்றதும் ஜன்னலோர ஆண் பேருந்தைவிட்டு இறங்கிச் செல்ல அவ்விடம் காலியானது. அந்த இடம்தான் காலியானது ஆனால் என்னுடைய மனம் கலகப்பட்டது. இந்த மடிக் கணினியோடு, இரண்டு பக்க நீளக்காற்சட்டைப் பைகளிலும் தொலைபேசிகள் மற்றும் இதர பொருட்களோடு அவ்விடத்தில் போய் இருந்தால் அவளது மடியிலும் கைபடச் சந்தர்ப்பம் உளது, ஏன் வீண் பிரச்சினை என்று நின்றபடியே மீண்டும் லோஷனின் விடியலை தெளிவுடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் சென்றதும் மறுகரையிலிருந்த ஆணும் இறங்கிவிட்டார்.

இப்போது அந்த இருக்கையில் பெண் மட்டும். சிறிது திரும்பி தலையை உயர்த்தி என்னைப் பார்த்தாள். நான் உண்மையாகவே விடியலில் லயித்திருந்தேன். அந்தப் பெண் அணிந்திருந்த உடுப்பு நான் அவளுக்கு நேர மேல கம்பியைப் பிடித்துக்கொண்டு நிற்பதில் எந்தவித சங்கடத்தையும் அவளுக்கோ எனக்கோ ஏற்படுத்தாதபடி இருந்ததால் நான் அவ்விடத்தை விட்டு நகராது இருக்கையிலும் இருக்காது சென்றுகொண்டிருந்தேன்.

நான் இறங்கவேண்டிய இடம் வந்தது. இறங்கி நடைபாதையில் சென்றுகொண்டிருந்தேன்.

"எக்ஸ்கியூஸ் மீ..."

காதுக்குள் கேட்கிறதா... யோசித்துவிட்டு நடந்தேன்.

எனக்கு அருகில் வந்து மீண்டும் "எக்ஸ்கியூஸ் மீ..."

அதே அழகான பெண்.

ஒரு பக்கக இயர் போனை லாவகமாகக் கழற்றிக் கொண்டு...தலையசைப்பால் என்ன என்று கேட்டேன்.

"ப்ளீஸ்... எ ஸ்மோல் கொஸ்டின்"

"ஓ.கே." (இனி தமிழாக்கம்)

"உங்களுக்கு ஆட்சேபனை இல்லாட்டி, ஏன் இடமிருந்தும் நீங்க அந்த இருக்கையில இருக்கவில்லை எண்டு சொல்ல முடியுமா?"

மனதுக்குள் சந்தோசத்துடன் கூடிய சிரிப்பு வந்தது.

"குறிப்பிட்ட காரணம் ஒண்டும் இல்ல... வழமையா நான் அப்படித்தான் வாறனான்...லப்டாப், பொக்கற்றில இருக்கிற பர்ஸ்கள், போன்கள் எண்டு
எல்லாம் இடைஞ்சலா இருக்கிறதால நிண்டு வாறதே சௌகரியமா இருக்கு"

"ம்ம்ம்... எனக்குச் சங்கடமா இருந்திச்சு அதான் கேட்டேன்... வேற ஒரு காரணமும் இல்லைத்தானே?"

என்ன கொடுமை சரவணா இது... பக்கத்தில இருந்திருந்தா விடியலை விட நல்லா இருந்திருக்கும்... இதுக்கு காரணம் வேற..
மனதுக்குள் யோசித்துக்கொண்டு

"அப்படியொண்டும் இல்லை"

"ஓகே. நன்றி... வித்தியாசமா யோசிக்காதேங்கோ... சந்திப்போம்"

அன்றைய நாள் முழுதும் ஏன் இதோ இப்ப தட்டச்சிக்கொண்டிருக்கும் வரை அவளை நினைக்கவோ அல்லது அந்த சந்தர்ப்பத்தை நினைக்கவோ
சந்தோசமாக இருக்கிறது.

இதுக்குள்ள நிறையத் தார்ப்பரியங்களும், மறைக்கப்பட்ட உண்மைகளும் இருக்கிறமாதிரி இருக்குது.

யாராவது பெண்பிள்ளைகள் அந்தப் பெண் ஏனப்படிக் கேட்டிருக்கும் என்று உண்மையைச் சொல்லுங்கோவன். அந்தப் பிள்ளை சிங்களப் பிள்ளையாகப்
போட்டுது. தமிழ்ப் பிள்ளை எண்டால் "அண்டைக்கு அந்த இருக்கையில் இருந்திருந்தால் இந்த மணவறையில இரண்டு பேரும் இருக்கேலாம போயிருக்கும் என்ன" எண்டு அந்தப் பிள்ளையையே கேட்கவேண்டிய காலமும் வந்திருக்கும்.

எண்டாலும் எனக்கொரு திருப்தி இருக்கு...

இன்னொரு நாள் இப்படி ஒன்று நடந்தால் நான் இருக்காவிட்டாலும் அந்தப் பிள்ளை இழுத்து இருத்தும். :-)

பிற்குறிப்பு : இலங்கையில் வெற்றி வானொலியில் கிழமை நாட்களில் காலை நேர நிகழ்ச்சியின் பெயர் விடியல். லோஷன் அவர்களால்
விடியல் நிகழ்த்தப்படுகிறது. (லோஷன் இல்லாட்டி அப்ப அந்த நாள் விடிய மாட்டுதா???)

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஒலி வடிவவில் முழுதும்
முதல் சந்திப்பு, முழுமையான நிறைவோடு, எல்லாம் நலமாக நடந்து முடிந்தது. மொத்தமாக சந்தோசமான 3 மணித்தியாலங்களும் 50 நிமிடங்களும்... ஒலி ஒளிபரப்பு சந்திக்கவிலயாதிருந்த பதிவர்களையும் வெளிநாட்டிலிருக்கும் பதிவர்களையும் சென்றடைந்தது கூடுதல் மகிழ்ச்சி.

ஒளிபரப்பு சாட்டிங்கினூடாக அவர்களின் கருத்துக்கள், கேள்விகள், நக்கல்கள் சந்திப்பை கூடுதல் சுவாரசியமாக்கியது. அவர்களின் கேள்விகள் சந்திப்பில் குறித்தளவு தாக்கத்தை உண்டாக்கியிருந்தது இனிவரும் காலங்களில் இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற அவாவை ஏற்படுத்தி நிற்கிறது.

சந்திப்பிற்கு வந்த குழந்தைப் பதிவர்வரை கொஞ்சம் கதைக்க வையுங்கோ, பங்குபற்றிய பெண் பிள்ளைகளில் பரிவு கொண்டு அவர்களில் யாரையாவது பேச விடுங்கோ, சந்திப்பு நிறைவடையும் நேரம் எல்லோரின் முகங்களையும் தனித்தனியே காட்டுங்கோ என்று அன்புக் கட்டளைகளை சாட்டிங்க் மூலமாக ஒளிபரப்பினூடு வேண்டுகோள் விடுத்தமை சந்திப்பைக் கலகலப்பாக்கியது.

நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது www.livestream.com இன் இலவச அடிப்படை கணக்கினூடாக. வழமையாக ஒளிபரப்புக்களை அவர்கள் சேமித்து வைப்பார்கள். இந்த முறையும் அவர்கள் சேமித்து வைப்பார்கள் நாங்கள் மீண்டும் பார்த்து மகிழலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்தேன். ம்ஹீம்... கொஞ்சம் ஓவர்தான். ஆறுபணத்துக் குதிரையும் வேணும் ஆறுகடக்கப் பாயவும் வேணும் எண்டு நினைக்கிறது நல்லதில்லைத்தானே. கிட்டத்தட்ட 4 மணித்தியால ஒளிபரப்பினை சலனமாகச் சேமித்து வைப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நல்லாவா இருக்கு...

சுவாரசியமான சாட்டிங்க் வரலாற்றினையும் நகலெடுக்கத் தவறிவிட்டேன். கவலைதான் என்றாலும் சந்திப்பின் முழுமையான ஒலிப்பதிவு இருக்கிறது என்ற மகிழ்ச்சி இன்னும் நிலைக்கிறது. நிகழ்வினை முழுமையாகப் பதிந்த மதுவர்மனுக்கு (என்ர அண்ணாதான் :-))) நன்றிகள்.

சந்திப்பில் பங்குபற்றாதவர்கள் இதனைக் கேளுங்கள். பங்குபற்றியவர்களும் மீண்டும் ஒரு முறை கேளுங்கள் சுவாரசியமாகவும் அடுத்தமுறை நிறைய விடங்களைக் கதைக்கவும் உதவும்.

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 1

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 2

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 3

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 4

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 5

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 6

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 7

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 8


இந்த எட்டுப் பகுதிகளையும் தரவிறக்கிப் பாவிப்பதற்கான சுட்டிகளும் இதோ...

இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 1
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 2
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 3
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 4
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 5
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 6
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 7
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 8

நேரடி ஒளிபரப்பினை கூடுதலாக 44 பதிவர்கள் ஒரே நேரம் பார்த்து சிறப்பு. கிட்டத்தட்ட 150 பேர்வரை நேரடி ஒளிபரப்பை இரசித்திருந்தார்கள். குசும்பனோட மொத்தமா (குசும்பனே மொத்தம்தான்) பத்து பேர் ஒன்றாக பார்த்து ரசித்தார்களாம்.

அருமையான ஒரு நாள்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 



நேரடி ஒளிபரப்பு - இலங்கைப் பதிவர் சந்திப்பு
இன்று (23-08-2009) ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு நடக்கவிருக்கும் இலங்கைப் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பாகக் காண்பிக்கப்படவிருக்கிறது.



பதிவிற்கு வரவியலாதுள்ள இலங்கையிலுள்ள பதிவர்களும், வெளிநாட்டிலிருந்து பதிவிடும் இலங்கைப் பதிவர்களும் நேரடியாக சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்களைப் பார்த்து அதன்போதே உங்கள் கருத்துக்களைப் பகிரக்கூடிய (Chatting மூலமாக)சந்தர்ப்பத்தை இது வழங்குகிறது.

நேரடி ஒளிபரப்பு மற்றும் எழுத்துமூல உரையாடலுக்கான சுட்டி இதோ,

www.livestream.com/srilankatamilbloggers

இது இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்பாதலால் நேரடி ஒளிபரப்பின் முதல் அனுபவமும், அதன்மூலமான கருத்துக்களைக் கையாளும் தன்மையும் நன்றாக அமைய பங்குபற்றுபவர்களின் ஒத்துழைப்பு வேண்டப்படுகிறது.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 





ராமன் எத்தனை ராமனடி...

சனிக்கிழமை மாலை, மணி 5:55,

வெறுமையாய் இருந்த பாதி ஜன்னலோர இருக்கையை பார்த்து ஒரு பக்கமாகப் புன்னகைத்தவன் முகத்தில் திருப்தி ஒன்று இருந்தது.

அதை நோக்கி நகர்ந்து, ஜன்னல் கண்ணாடியையும் சிறிது நகர்த்திவிட்டு முகத்தை வருடிச்செல்லும் காற்றில் லயித்திருந்தான். இருக்கைகளில் இருந்த சிலர் தூங்கி வழிந்துகொண்டிருந்தனர்.

தொடர்ந்த வந்த இரண்டு பேருந்து நிறுத்தங்களில் ஆட்களே இல்லை. மூன்றாவது நிறுத்தத்தில் ஜோடியாய் இருவர் ஏறினர். சென்றுகொண்டிருந்த பேருந்து நான்காவது நிறுத்தத்துக்கு முன்னரே நின்றது.

பேருந்தின் முன் வாயிலாலும் பின் வாயிலாலும் சாம்பல் நிறத்தில் யூனிபார்களுடன் ஆள்கள் ஏறும்போதுதான் இவன் கொஞ்சம் திடுக்கிட்டு நிமிர்ந்தான். சட்டைப்பையினுள் அவசரமாய்த் தேடியவன் கையில் இம்முறை ஏதுவும் கிடைக்கவில்லை.

ஏனையோரைத் தவிர்த்து அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்த இவனை நோக்கி வந்த யூனிபார்ம் மனிதன் “டிக்கட்” என்றபடி கையை நீட்டினான்.

இம்முறை அசடு வழியச் சிரித்தான்.

நிலையான தண்டப்பணமாக நானூறு ரூபாய்களும், குற்றத்திற்கு நீர்கொழும்புக்கான டிக்கட் பெறுமதியின் இருமடங்கான நூற்று எண்பது ரூபாய்களுமாக மொத்தம் ஐநூற்று எண்பது ரூபாய்களை கொடுத்துவிட்டு பற்றுச் சீட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவன் முகத்தில் வருடிச்சென்ற காற்றில் இம்முறை சிறிது வெம்மை கலந்திருந்த்து. நேரம் 6:00 ஐக்காட்டிய மணிக்கூட்டை வெறுமையுடன் பார்த்தான்.

ஏலவே இறங்கியிருந்த டிக்கட் பரிசோதகர், தனது மோட்டார் சைக்கிளில் இருந்த உண்மையான பற்றுச்சீட்டுப் புத்தகத்தின் மேல் கையிலிருந்த போலிப் பற்றுச்சீட்டுப் புத்தகத்தை வைத்துவிட்டு.................................... தனது உயர்தர போனில் யாரோ ஒரு பெண்ணுடன் சிரிப்பொலியுடன் கதைத்துக்கொண்டிருந்தார்.

##################################################
##################################################################

சனிக்கிழமை மாலை, மணி 5:30,

கையை நீட்டி மறித்த பேருந்து கொழும்பிலிந்து நீர்கொழும்புக்கானது. மறித்த வாலிபன் வரலாறு காற்றில் ஓர் வார்த்தை அஜித் மாதிரி அன்றே மழித்த முகத்துடன் இருந்தான். அழகில் கூட அஜித்துக்கு குறைவில்லை.

பேருந்து இருக்கைகள் பல பாதியாய் வெறுமையாய் இருந்தன, இன்னும் சில முற்றிலும் வெறுமையாய் இருந்ததன. பார்த்து தனக்கு ஏற்றாற்போல் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

ஜன்னல் அருகே இருந்த பெண்ணின் கேசம் காற்றுக்குத் தவழ்ந்து ஒன்றிரண்டு இவன் காதையும் வருடியது. பியூட்டி பார்லருக்கு அடிக்கடி சென்று கேசத்தை கவனித்துக் கொள்வாள் என்பது அருகிலிருந்து பார்த்து வியக்கும் அவனது கண்களில் தெரிந்தது.

மணிக்கட்டைத்திருப்பி நேரத்தைப் பார்த்துவிட்டு அவளை கடைக்கண்களால் பார்த்தான்.

“டைம் பிளீஸ்”

மணிக்கட்டைத்திருப்பி இம்முறை நேரத்தைப் பார்த்துவிட்டு சிரித்தபடியே பதிலளித்தான்.

“5:40”

எதிர்பார்ப்பொன்று பூர்த்தியாகிய முகபாவத்துடன்,

“ஆர் யூ ரமில் வன்?” கேட்டான்.

“இல்லை” என சுத்தத் தமிழில் பதிலளித்தாள்.

இவனும் சிரித்துக்கொண்டான்.

அதன்பின் நடந்த பரஸ்பர உரையாடலில் மெயின் ரோடு வழுக்குவது கூட அவனுக்குத் தெரியவில்லை. “நான் அடுத்த ஹோல்ரில் இறங்குகிறேன்” என்று அவள் சொன்னபோதுதான் ஏதோ யோசித்தவன்,

“உங்கட போன் நம்பரைத் தருவீங்களா?”

“என்னட்ட இப்ப போன் இல்லை, உங்கட நம்பரைத் தாங்கோ”

சட்டைப் பையினுள் தேடிப்பார்த்தவனின் கையில் கிடைத்த்து பேருந்து டிக்கட். அதிஷ்டவசமாக இருந்த பேனாவால் டிக்கட்டின் பின்புறத்தில தனது நம்பரை அவசரமாக எழுதி கொடுத்துவிட்டு அவள் இருக்கையிலிருந்து எழுந்து செல்லும்போது அவளின் அண்மையை இரசித்தபடி வழியனுப்பி வைத்துவிட்டு பெருமூச்செறிந்து கொண்டான்.

##################################################
##################################################################

சனிக்கிழமை மாலை, மணி 5:15,

“இல்லை அங்கிள், அடுத்த்தா வாற பேருந்தில ஏறுறன். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ...” என்று போனில் கதைத்தபடியே வந்து நின்ற பேருந்தில் ஏறியவள் கடும் மரூண் கலர் சுடிதார் அணிந்திருந்தாள்.

மாநிற கழுத்தினருகே கையை கொண்டுசென்று காதோரத்தினூடு தலைமயிரைக்கோதிக்கொண்டு ஜன்னலோர இருக்கையில் இருந்தவளை அனைவரும் கடைக்கண்களால் இரசித்துவிட்டு பயணித்துக்கொண்டிருந்தனர்.

இடையே நிறுத்தங்களில் ஏறிய சிலரும் ஏனோ காலியாக இருந்த இவளது பாதி இருக்கையில் அமரவில்லை.

ஹாண்ட் பேக்கினுள் இருந்த போனை எடுத்து நேரத்தைப் பார்த்தாள்.

நேரம் 5:30….

நேரத்தைப் பார்த்துவிட்டு போன் சைலண்ட் மோடில் இருப்பதை உறுதி செய்துவிட்டு ஜன்னலினூடு பார்த்தாள்.

எதிரே ஒரு வாலிபன்; கையைக் காட்டி பேருந்தை மறித்துக்கொண்டிருந்த வாலிபன்; அழகாகத்தான் இருந்தான் ஆனாலும் அஜித்தைப் போல சிறிது தொப்பை.

அருகில் வந்தமர்ந்த வாலிபனின் அழகை அந்தச் சிறு தொப்பை ஒன்றும் குறைத்துவிடவில்லை.

காற்றில் கேசத்தை பறக்கவிட்டு அனுபவித்துக்கொண்டிருந்தவள் அவனை நோக்கித் திரும்பினாள்.

“டைம் பிளீஸ்”...

*****************************

பேருந்திலிருந்து இறங்கிய அவள் பேருந்து சென்றதும் ஹான்ட்பேக்கைத் திறந்து போனை எடுத்தாள்.

“அங்கிள், நான் இறங்கிட்டன். எல்லாம் சரி. GN-2359 நம்பர் பேருந்துதான்... கவனமா பாத்துக்கொள்ளுங்கோ, மிஸ் பண்ணிடாதேங்கோ”

*****************************

அங்கிள் திரும்ப தனது உயர்தர போனில் கதைக்கும்போது நேரம் 6:00 மணி. அங்கிளுடன் சிரித்துப் பேசிக் கதைத்துக்கொண்டிருந்தாள்.


இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது