நா
Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

நியாபகம் ≠ ஞாபகம்

நான்கைந்து பதிவர்கள் நியாபகம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். ஐயனார் அய்யனாராவதற்கும், ஔவையார் அவ்வையாராவதற்கும் ஒலிக்குறிப்பு ஒற்றுமையை காரணம் காட்டலாம் பிழையானதெனினும்கூட. ஞாபகம் எவ்வாறையா (எவ்வாறய்யா அல்ல) நியாபகம் ஆகிறது. உங்களது நீண்டகாலப் பழக்கம் நியாபகம் என்ற இல்லாத; தவறான சொல்லை ஞாபகம் என மாற்றக் கஷ்டப்படுத்தலாம். ஆனால் உங்கள் குழந்தைகளுக்கும் அவ்வாறே சொல்லிக் கொடுக்காதீர்கள்.

A for Apple

இந்தத் தலையங்கத்தில் நிறையப் பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நானும் மணியால் இந்தப் விளையாட்டுக்கு அழைக்கப்பட்ட பின்னர்தான் அது என்ன என்று ஆராயவிழைந்தேன்.

பின்னோக்கிப் பின்னோக்கிச் சென்று விளையாட்டின் ஆரம்பத்தைப் பிடிப்போமென்றால் முடியவில்லை. யாராவது இந்த A for Apple இன் ஆரம்பத்தைச் சொன்னால் நலம். எப்படி இந்த உபயோகமான விளையாட்டு ஆரம்பித்தது இப்போது எப்படி மாறியிருக்கிறது என அறிய அவா, அவ்வளவுதான். இரண்டு மூன்று நாட்களில் நானும் பங்குகொள்கிறேன்.

இந்த நல்ல விளையாட்டை நினைக்க ஆங்கிலப் பகிடி ஒன்று நினைவுக்கு வருகிறது.


Customer care இற்கு தொலைபேசியில் அழைப்பு வருகிறது...
"உங்களது பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் சொல்லுங்கள்"
"பெயர்...Appappa.."
"விளங்கவில்லை..."
"Appappa...a for apple, p for pineapple, p for pineapple,
a for apple, p for pine.. "
"ஐய..மொத்தமா எத்தனை ஆப்பிள், எத்தனை பைனாப்பிள்
என்று சொல்ல முடியுமா?"
- ரீடர்ஸ் டைஜஸட் உபயம்

காலுறை நாத்தம்

நாற்றம் என்பதுதான் எழுத்துவழக்காக இருப்பினும் நாத்தம் எனும் பேச்சுவழக்குக்கு வீச்சு அதிகம்தான் (நியாபகம் என்பது பேச்சு வழக்கல்ல). நாற்றம் பிடித்தவனே என்பதை விட நாத்தம் புடிச்சவனே என்பதில் effect இருக்கிறது.

சரி, இப்ப விடயம் என்னவென்றால் எங்கட பாதங்களில வழமையாக குஜாலா இருந்துகொண்டிருக்கும் சாதாரண பாக்டீரியாக்கள் நாங்கள் காலறையைப் போட்டால் வாற ஈரப்பதம் கண்டால் கூட்டமாச் சேந்து கும்மி அடிச்சு (எங்கட வலைப்பதிவர்கள் அடிக்கிறத விடக் கம்மிதான்) துர்நாற்றமுடைய சல்போரஸ் விளைவொன்றை வெளியேற்றுவார்கள் (says Doris J. Day, M.D., an assistant professor of dermatology at New York University).

இதை நீக்க என்ன செய்யலாம்... காட்டன் (cotton ) காலுறைகளையும், மூச்சுவிடக்கூடிய சப்பாத்துக்களையும் பாவியுங்கள் என்கிறார் அவர். அதாவது அணியும் சப்பாத்து காற்றை உள்வாங்கக் கூடிய பதார்த்தங்களால் (தோல் மற்றும் துணிவகை) ஆனதாக இருக்கவேண்டும். காலுறையை அணியும் முன் ஈரப்பதனுறிஞ்சும் பவுடர்களை பாதத்திற்குப் போட்டுக்கொள்ளலாம். இந்த நாத்தப் பிரச்சினை அதிகமாக உள்ளவர்கள் வாரத்துக்கு மூன்று இரவுகளில் தேயிலை ஊறிய நீரில் பாதங்களை சிறிது நேரம் ஊற வைக்கவேண்டும். தேயிலையிலுள்ள டனிக் அமிலம் (Tannic acid) காலின் துர்நாற்றத்தைப் போக்கும். இதுக்கு மேலயும் பிரச்சினை எனின் வைத்தியர் ஒருவருடன் கலந்தாலோசிப்பதே சிறப்பு.


நாற்றம் என்பது உண்மையில் வாசத்தினை குறிக்கும் சொல். அந்தப் பூவின் நாற்றம் என்னை கவர்ந்திழுத்தது போன்ற வசனங்கள் தமிழில் இயல்பு. நாற்றத்திற்கு எதிர்ச்சொல் துர்நாற்றம். அவள் நாத்தம் புடிச்சவள் என்பதன் நிஜ அர்த்தம், அவளுக்கருகில் போனாலே வாசம் வீசும் என்பதுதான். ஆனா நாங்கள் சிறிது சிறிதாக அர்த்தத்தை மாற்றிவிட்டோம்.



மதுவதனன் மௌ.

 

பெண்களே அப்படித்தானா அல்லது சிறுவயது முதல் பெற்றோர் ஊட்டி வளர்க்கிறார்களா? எனது பன்னெடுங்கால (ஒரு நாலைந்து வருடம்தானுங்க) பார்வையிலிருந்து இந்தக் கேள்வி எனக்குள் குடைகிறது. வேறொன்றுமில்லை நெரிசல் மிகுந்த வீதியின் மஞ்சள் கடவையை கடக்கும்போது அநேகமான தரம் அவதானித்திருக்கிறேன் கூட்டமாகக் கடக்கும்போது பெண்கள் எப்போதும் இடது கைப் பக்கம் ஓடிவந்து நிற்பார்கள். பாதி வீதியைக் கடந்தவுடன் வலது பக்கம் இயல்பாகவே மாறுவார்கள். எப்படி அநேகமான பெண்கள் இப்படி இசைவாக்கமடைகிறார்கள் என அதிசயித்திருக்கிறேன். விளக்கத்திற்காக பாறைபோல உறுதியான ஆண்களின் பாதையை நீலத்திலும் இதயம் போன்ற மென்மையான பெண்களின் பாதையை சிவப்பிலும் குறித்திருக்கிறேன். நீங்களும் மஞ்சள் கடவையைக் கடக்கும் போது ஒருமுறை அவதானித்துப் பாருங்கள்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

ஜிமெயில் தனது பயனாளர்களுக்காக இன்னொரு பாதுகாப்பு முறையை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் கம்பனியிலோ அல்லது நெற்கபேயிலோ ஜிமெயில் பாவித்துவிட்டு லாக்அவுட் பண்ணாது வந்துவிட்டீர்களா. உடனடியாக எங்காவது அருகில் உள்ள இணையத்தொடர்ப்புக்குச் சென்று உங்கள் ஜிமெயிலுக்குச் சென்று கம்பனியிலோ அல்லது நெற்கபேயிலோ திறந்து வைத்துவிட்டு வந்த அக்கவுண்டை லாக்அவுட் பண்ணமுடியும். மேலும் உங்களது ஜிமெயில் வேறு யாராலாவது பயன்படுத்தப்படுகிறதா எனவும் உறுதிசெய்துகொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்காக இங்கே செல்லுங்கள்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சுஜாதா எங்கோ சொல்லக் கேட்டிருக்கிறேன். தமிழில் புணர்ச்சி விதிகளின் படி இந்த இருவேறு புணர்ச்சிகளையும் எவ்வாறு விளங்கப்படுத்துவது.

தங்கம் + காசு = தங்கக்காசு
சங்கம் + காலம் = சங்ககாலம்

முன்னையது திரிதல் விகாரப் புணர்ச்சியாக இருக்க, பின்னயது கெடுதல் விகாரப் புணர்ச்சியாக உள்ளது. ஆனால்

வருத்தப்படா வாலிபர் சங்கம் + காதல் = வருத்தப்படா வாலிபர் சங்கக்காதல்

என திரிதல் விகாரப் புணர்ச்சியாகத்தான் வரும். யாராவது தமிழ் வல்லுநர்கள் இதைத் தெளிவித்தால் நலமே.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

மதுவதனன் மௌ.