நா

சரத் பொன்சேகா நாளைக்கு கூட்டத்தில பேசப்போறார் எண்டு இரவோடிரவா ஆரோ கூட்டம் நடக்கவிருந்த மேடை அங்கிருந்த பதாகைகள் எண்டு எல்லாத்தையும் எரிச்சு நீலநிற ரிப்பன்களை போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்களாம்.

பனாதைப் பயலுகள். கூட்டம் நடக்கவிருந்த கிராமத்தில பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்ககாது கூட்டத்துக்கு போகாம இருப்பம் எண்டிருக்கிற சில பல சனம்கூட இதனால் கோபப்பட்டு ஆதரவு தெரிவிக்கும் என்பது எனது கருத்து.

இல்ல எதிர்க்கட்சிதான் இதையே ஒரு வழியாக கடைப்பிடிக்குதோ எண்டு மதுவுக்கு மண்டைக்குள்ள மொக்குச் சந்தேகம் வேற.
அண்ணாவுக்குத் தெரிந்த ஒருவர். நடுத்தர வயதுடையவர். அவரின்ர யதார்த்தைப் பாருங்கோ..


"உந்த ரீவியளைத் திறந்தா ஒரு சீரியல்... மண்டை வெடிக்குது.. தியேட்டருக்குப் போனா வாற படங்களைப் பாத்து மண்டை காயுது.. கொஞ்சக்காலமா எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல.. இப்ப நெடுகலும் புளூபிலிம்தான் எடுத்துப்பாக்குறனான்.. உந்தச் சீரியலுகள் படங்கள் பாக்கிறத விட புளூபிலிம் எவ்வளவோ மேல்"..

சீரியலுகளாலயும், அண்மையில் வந்த படங்களலாலயும் மனுசன் எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கவேணும் எண்டு பாருங்கோ..
நித்திரை என்பது மிக முக்கியமானது. நித்திரையிலதான் எங்கட கலங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. குறிப்பாக முளைக்கலங்கள். அடுத்தநாள் புதுப் பொலிவோட, நல்ல எண்ணங்களோட, புதுப்புது ஐடியாக்களோட இருக்கவேணுமெண்டா ஆழ்ந்த உறக்கம் அவசியம்.

எவ்வளவு நேரம் நித்திரை கொள்ளுறம் என்பது அவசியமில்லை. எவ்வளவு நேரம் தொடர்ந்து நித்திரை கொள்ளுறம் என்பதுதான் அவசியம். அரை அரை மணித்தியாலமா பத்துமணித்தியாலம் நித்திரை கொள்வதில ஒன்றுமே இல்லை. ஆறரை மணித்தியாலம் தொடர்ந்து கொள்வதில முழுப் பயனும் பெறலாம்.


இந்தக் கணினி உலகில நித்திரை சீரின்மை என்பது பெரியொரு பிரச்சினை. நீங்கள் எப்படி?. இங்க போய் பரீட்சித்தப் பாருங்கோ. பிபிசியின் சுட்டி. பயப்படாது தகவல்களை தட்டச்சுங்கோ. உங்களுடைய வாழக்கைமுறை நித்திரைக்குப் பங்கம் விளைவிக்குதா, அதை எப்படி ஒரளவு சீராக்கலாம் என்று இறுதியில் சிறு குறிப்பு என்று நல்ல விடயங்களைச் சொல்லுது.


http://www.bbc.co.uk/science/humanbody/sleep/profiler/

எனக்கு ஒரளவு பரவாயில்லை எண்டு சொல்லுது. என்ர நண்பர் பனர்ஜி நிமலுக்கு நீ ஒரு ஆந்தை எண்டு சொல்லிப்போட்டது.

நித்திரைக்கு முதல் செக்ஸ் வச்சுக்கொள்ளுவீங்களோ எண்டெல்லாம் கேக்குது. கல்யாணம் கட்டினாக்கள்தான பதிலளிக்கவேணுமெண்டில்லை. போய் நீங்களும் ஒருக்கா பரிசோதித்துப் பாருங்களேன்.

படத்தைச் சொடுக்கிப் பாருங்கோ

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

கடந்த 17 மாதங்களாக அவளை நான் அறிந்திருக்கிறேன். அல்லது அறிந்து கொண்டுருக்கிறேன். நானல்ல அவளை ஒரு முறை பார்க்கும் எவரும் அல்லது எவனும் அறிய ஆரம்பிப்பார்கள் என்பது ஒன்றும் ஆச்சரியமூட்டக்கூடிய விடயமில்லை.



நாளொரு கலரும் பொழுதொரு ஸ்டைலுமாக உடையணிவாள். அந்தந்தக் கலருக்கேற்ற பாதணிகளோ பலவிதம். எல்லாக் கலரையும் கலந்து ஊத்தின மாதிரி ஒரு செருப்பு வச்சிருக்கிறன். எந்தக் கலர் உடுப்புப் போட்டாலும் பொருந்தும் எனக்கு.

பனியன் போட்டு சேட்டும் போட்டு பரவசமா பார்த்து நடக்கிறவன் நான். பனியன் மட்டுமே போட்டு (யோவ்.. மேலாடையை பற்றி மட்டும்தான் கதைக்கிறேன்) பார்த்தாலே பரவசமா நடக்குறவள் அவள்.


ஐந்தாறு நாளுக்கொருக்கா, ஐந்தாறு மயிரை வெட்டிச் சேப் ஆக்க ஐநூறு கொடுப்பாள் அவள். ஸ்றெயிற் பண்ணின மயிராம் அது. மண்ணாங்கட்டி சேப்பிங்கும் மயிரில் ஸ்றெயிற்றிங்கும். மாதத்துக்கு அரை முறை (இரண்டு மாதத்துக்கு ஒரு முறை.. ஹீ ஹீ) மண்டை தெரிய வெட்டுவன் நான்.


தொலைவெண்டாலும் தொங்கிக்கொண்டு பஸ்ஸில போவேன். காரில் போய்ப் போய் போரடிக்குதாம் என்று பஸ்ஸில போவதற்கு விருப்பப்படுவாள். பஸ் பிழைச்சா கொண்டக்ரரிட்ட காசு வேண்டிக்கொண்டு அடுத்த பஸ் எனக்கு. கார் பிழைச்சா பக்கத்தில விட்டுட்டு கப் (Cab) பில போவது அவளுக்கு.

அவள் போடுறது Triumph உயர்தர உள்ளாடைகள். நான் போடுறது என்ன பிராண்ட் எண்டே எனக்குத் தெரியாது. அவளுக்கும் கூடத்தான்.



சரி இந்தளவுக்கு எப்படி ஒப்பிட முடியுது எண்டு யோசிக்கிறீங்களா? சிம்பிள்.. நாளையிண்டையோட நானும் அவளும் லவ்வ ஆரம்பிச்சு சரியாக 17 மாதங்கள் ஆகப்போகுது. நான் போன பஸ்ஸும் அவளின்ர காரும் அக்சிடன்ற் ஆக, மயங்கிக் கிடந்த அவளை இழுத்து வெளியில போட்டுட்டு அவளின்ர ICE இலக்கத்திற்கு போன் பண்ணினதுதான் நான் செய்தது. பிச்சை boy எண்டாலும் பாக்க டீசண்டாத்தான் இருப்பன். இன்று வரை லவ்விக்கொண்டிருக்கிறோம்.


கதையின் நீதி : எல்லாக் காதல்களுமே கல்யாணத்தில் முடியுமென்றில்லை.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ | cowboymathu

 


 கார்க்கி ஒரு விஜய் ரசிகர். அனைவருக்கும் தெரியும். அவர் அண்மையில் அஜித்தின் அசல் படப் பாடல்களைப் பற்றி அலசியிருந்தார். சிறப்பாகவும் சொல்லியிருந்தார். படம் ஹிட்டாகவும் வாழ்த்தியிருந்தார்

அதிலொரு பின்னூட்டம்..

//படம் ஹிட்டாக வாழ்த்துகள்.//

இதுதாங்க விஜய் ரசிகரின் பெருந்தன்மை என்பது!


இந்தப் பின்னூட்டம். பார்ப்பதற்கு நல்லது போல இருந்தாலும் உண்மையாக யோசித்துப் பாருங்கள். கார்க்கி என்ற மனிதனின் நல்ல இயல்பான வாழ்த்தும் தன்மையை மறுத்து ஏதோ விஜயை பின்பற்றுவதால் வந்த இயல்பு போன்றதொரு தவறான கருத்தைத் தொனிக்கிறது.

பாராட்டவேண்டிய இயற்கையான ஒரு மனிதனின் தன்மையை ஏன் தனித்தன்மையாக்கி கேவலப்படுத்தவேண்டும்.

----------------------------------------------------------------------------

புல்லட் அண்மையில் அரசியலைப் பற்றி அலசியிருந்தார். இலங்கையின் தேர்தல் பற்றி சூடாக கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

அதிலொரு பின்னூட்டம்...

தமிழர்கள் என்றாவது ஒற்றுமையாக இருந்துள்ளார்களா? மூவேந்தர் கால
மெல்லாம் ஒருவரோடுஒருவர் மோதிக்கொண்டிருந்தார்கள்.அவர்கள் ஒற்றுமை
யானது ஒரு கறைபடிந்த நிகழ்ச்சியான பாரிமகளைக்கற்பழிக்கும் முயற்சியில்
மட்டுமே.தமிழன் ஒரு பாபப்பட்ட சமுதாயம்.இவ்வளவு அழிவின் பின்புகூட
ஈழத்தமிழரிடம் ஒற்றுமை ஏற்படவில்லை.இன்றும் யாழ்ப்பாணம், மட்டக்கிளப்பு,
வெளிநாட்டான்,கொழும்புக்காரன் என்ற பாகுபாடு புரையோடிப்போய்யுள்ளது.
எப்போது இந்நிலை மாறும்.என்னசெய்தால் மாறும் யாராவது சொல்வீர்களா?

எவன் எப்ப ஒற்றுமையாக இருக்கிறான். சிங்களவனை எடுத்தாலும் கண்டிச் சிங்களவன், கரையோரச் சிங்களவன், கொழும்புச் சிங்களவன், காலிச் சிங்களவன், வெளிநாட்டுச் சிங்களவன் போன்று பல பாகுபாடு இருக்கையா.


அமெரிக்கனை எடுத்தாலும் மெக்ஸிகன், நியூயோர்க்காரன், டெக்ஸாஸ் காரன் என்று பாகுபாடு இருக்கு.

இந்தியாவை எடுத்தாலும் மாநிலங்கள், நகரம், கிராமம் எண்டு பாகுபாடு இருக்கு.

இதொண்டும் தமிழனுக்க மட்டும் இருக்கிறதில்லையையா. உலகத்தில எல்லா உயிரினங்களுக்குள்ளயும் இருக்கிற இயற்கையான தன்மை. வீட்டில சகோரங்களுக்கிடையில வாற வேறுபாட்டில இருந்து, பக்கத்து வீடுகளுக்கிடையில வாற வேறுபாட்டில இருந்து, பக்கத்து பிளாட்டுகளுக்குள்ள வாற வேறுபாட்டில இருந்து, பக்கத்துத் தெருவுக்குள்ள வாற வேறுபாட்டில இருந்து, பக்கத்து ஏரியாவுக்குள்ள வாற வேறுபாட்டில இருந்து, பக்கத்து ஊருக்குள்ள வாற வேறுபாட்டில இருந்து, பக்கத்து நகரத்துக்குள்ள வாற வேறுபாட்டில இருந்து, ஜாதி, இனம், மதம், இடம், பள்ளிக்கூடம், வேலைத்தளம் என்று ஏதோ ஒரு விதத்தில குழுவாகும்போது ஏற்படுகிற எல்லாருக்குமான இயல்பு. இதுல தமிழன் மட்டும் தனிய நிண்டு ஒண்டும் புடுங்கவில்லையையா.

பொதுவான இயற்கையான தன்மையை ஏன் தமிழனுக்கு மட்டும் போட்டு நீங்களும் கேவலமாகி, மற்றாக்களையும் கேவலமாக்குகின்றீர்கள்.

-------------------------------------------------------------------------------

இது ஒரு இடமும் வரவில்லை. பொதுவாகக் கதைக்கிறேன். மேல நான் கூறிய இரண்டு பிரச்சினைகளுக்கும் கீழே சொல்லப்போற பிரச்சினைக்கும் சம்மந்தம் இருக்கோ எண்டு பாருங்கோ.


இயற்கையின் படி மனிதன் வாழுறான். இயற்கையை மீறி சில இடங்களில போறான். ஒவ்வொரு காரியத்துக்கும் காரணத்தை தேடும் ஆற்றல் மனிதனிட்ட இருக்குது. அதனாலதான் விஞ்ஞானம் வந்தது. மற்றவனுக்கு அடிக்காதே என்று காரணத்தோட சொல்லக்கூடிய தன்மை மனிதனுக்கு இருக்கு. எந்தெந்த இடத்தில பொய் சொல்லக்கூடாது... அல்லது எந்த வயதில பொய் சொல்லக்கூடாது என்று காரணத்தோட சொல்லுற ஆற்றல் மனிதனுக்கு இருக்கு. அதாவது மதங்கள் அல்லது கடவுளர் சொல்லுகின்ற நல்வழிகளை காரணத்தோடு சொல்லக்கூடிய அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மை மனிதனுக்கு இருக்கு. ஒரளவு படிப்பறிவு அல்லது அனுபவ அறிவு வேணும் என்பது இயற்கை.

இப்படியான பொதுப்படையான, மனிதனால் காரணங்களோடு சொல்லக்கூடிய அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களை மதம் அல்லது கடவுள் எனும் பெயர் கொண்டு சொல்லிவிட்டு அதுதான் மனிதனை நல்வழிப்படுத்துது என்று சொல்வது எவ்வளவு கேணைத்தனமானது.


பிற்குறிப்பு : ரிஷான் ஷெரிப்பின் இந்த பதிவையும் புல்லட்டின் பதிவையும் கார்க்கியின் பதிவையும் வாசிச்சு வந்த உணர்வின் கலவைதான் இந்தப் பதிவு.