நா
Showing posts with label நாவசைவுகள். Show all posts
Showing posts with label நாவசைவுகள். Show all posts

பதிவர் சந்திப்பு
இந்த முறையும் பதிவர் சந்திப்பு மிக நேர்த்தியான முறையில நடாத்தப்பட்டிருக்கிறது. கடந்ததை விட சந்தித்தத அனைவருக்குமிடையில் ஏதோ ஓர் ஒற்றுமை சம்மந்தப்பட்ட பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் தெரிகிறது. ஆனாலும் சந்திப்பின் இறுதியில் பதிவர்கள் தமக்குள் கலந்துரையாடவென தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் பதிவர்கள் அவ்வளவாக அளவளாவவில்லை. செய்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும். அடுத்த அதிகார மையம் இதனைக் கவனிக்குமா?
காவற்துறையும் கூட்டங்களும்
பதிவர் சந்திப்பு நடந்துகொண்டிருந்த வேளை காவற்துறை வந்திருந்து. சிஐடியும் வந்திருந்தது. நிச்சயமாக யாரோ ஒருவர் எமது சந்திப்புக் குறித்து அவர்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். வந்தவர்கள் தமிழ் ஆக்கள் சந்தித்துக் கதைப்பதில் கூட ஆர்வம் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சந்தேகப்பட்டுக் கேட்டது 'பல்கலைக்கழக மாணவர்கள் சந்தித்துக் கதைக்கிறீர்களா' என்பதே. சிவப்புத் துண்டு பக்காவாத்தான் அசையுது.
மேலதிக வாசிப்புக்கு http://aiasuhail.blogspot.com/2010/12/blog-post_22.html
வெற்றி TV
இலங்கையில் ஒளிபரப்பாகும் வெற்றி TV இற்கு என்ன நடந்தது. ஆரம்பத்தில் TBO நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக்கொண்டு இருந்தவர்கள் இப்போது தனியே சினிமா பாடல்களும் படங்களுமாக மட்டும் ஒளிபரப்புகிறார்கள். அதுவும் ஒவ்வொரு நாளும் அதே பாடல்கள்.
இஸ்லாம் - கிறிஸ்தவம்
இணையத்தில் உலவும்போது சுவாரசியமாக இருந்தது. மேலதிகமாக வாசிக்கவில்லை. இஸ்லாம் - கிறிஸ்தவம் - யூத மதஙகள் மூன்றும் பல ஒரே இயல்புகளைக் கொண்டிருக்குதாம். இஸ்லாம் - கிறிஸ்தவ மதப் பெயர்களின் ஒற்றுமையைப் பாருங்கள்
இப்ராகிம் - ஏப்ரகாம்
பாத்திமா - பற்றிமா
ஈசா - ஜீசஸ்
மூசா - மோசஸ்
தாவூத் - டேவிட்
யூசுப் - ஜோசப்
மேலதிகமாக வாசிக்கவேண்டும்.
பட உதவி http://pagentsprogress.com

பிரியமுடன்,
மதுவதனன் மௌ | cowboymathu

 

சரத் பொன்சேகா நாளைக்கு கூட்டத்தில பேசப்போறார் எண்டு இரவோடிரவா ஆரோ கூட்டம் நடக்கவிருந்த மேடை அங்கிருந்த பதாகைகள் எண்டு எல்லாத்தையும் எரிச்சு நீலநிற ரிப்பன்களை போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்களாம்.

பனாதைப் பயலுகள். கூட்டம் நடக்கவிருந்த கிராமத்தில பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்ககாது கூட்டத்துக்கு போகாம இருப்பம் எண்டிருக்கிற சில பல சனம்கூட இதனால் கோபப்பட்டு ஆதரவு தெரிவிக்கும் என்பது எனது கருத்து.

இல்ல எதிர்க்கட்சிதான் இதையே ஒரு வழியாக கடைப்பிடிக்குதோ எண்டு மதுவுக்கு மண்டைக்குள்ள மொக்குச் சந்தேகம் வேற.
அண்ணாவுக்குத் தெரிந்த ஒருவர். நடுத்தர வயதுடையவர். அவரின்ர யதார்த்தைப் பாருங்கோ..


"உந்த ரீவியளைத் திறந்தா ஒரு சீரியல்... மண்டை வெடிக்குது.. தியேட்டருக்குப் போனா வாற படங்களைப் பாத்து மண்டை காயுது.. கொஞ்சக்காலமா எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல.. இப்ப நெடுகலும் புளூபிலிம்தான் எடுத்துப்பாக்குறனான்.. உந்தச் சீரியலுகள் படங்கள் பாக்கிறத விட புளூபிலிம் எவ்வளவோ மேல்"..

சீரியலுகளாலயும், அண்மையில் வந்த படங்களலாலயும் மனுசன் எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கவேணும் எண்டு பாருங்கோ..
நித்திரை என்பது மிக முக்கியமானது. நித்திரையிலதான் எங்கட கலங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. குறிப்பாக முளைக்கலங்கள். அடுத்தநாள் புதுப் பொலிவோட, நல்ல எண்ணங்களோட, புதுப்புது ஐடியாக்களோட இருக்கவேணுமெண்டா ஆழ்ந்த உறக்கம் அவசியம்.

எவ்வளவு நேரம் நித்திரை கொள்ளுறம் என்பது அவசியமில்லை. எவ்வளவு நேரம் தொடர்ந்து நித்திரை கொள்ளுறம் என்பதுதான் அவசியம். அரை அரை மணித்தியாலமா பத்துமணித்தியாலம் நித்திரை கொள்வதில ஒன்றுமே இல்லை. ஆறரை மணித்தியாலம் தொடர்ந்து கொள்வதில முழுப் பயனும் பெறலாம்.


இந்தக் கணினி உலகில நித்திரை சீரின்மை என்பது பெரியொரு பிரச்சினை. நீங்கள் எப்படி?. இங்க போய் பரீட்சித்தப் பாருங்கோ. பிபிசியின் சுட்டி. பயப்படாது தகவல்களை தட்டச்சுங்கோ. உங்களுடைய வாழக்கைமுறை நித்திரைக்குப் பங்கம் விளைவிக்குதா, அதை எப்படி ஒரளவு சீராக்கலாம் என்று இறுதியில் சிறு குறிப்பு என்று நல்ல விடயங்களைச் சொல்லுது.


http://www.bbc.co.uk/science/humanbody/sleep/profiler/

எனக்கு ஒரளவு பரவாயில்லை எண்டு சொல்லுது. என்ர நண்பர் பனர்ஜி நிமலுக்கு நீ ஒரு ஆந்தை எண்டு சொல்லிப்போட்டது.

நித்திரைக்கு முதல் செக்ஸ் வச்சுக்கொள்ளுவீங்களோ எண்டெல்லாம் கேக்குது. கல்யாணம் கட்டினாக்கள்தான பதிலளிக்கவேணுமெண்டில்லை. போய் நீங்களும் ஒருக்கா பரிசோதித்துப் பாருங்களேன்.

படத்தைச் சொடுக்கிப் பாருங்கோ

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

டாக்டர் என்றால் டாக்டர்தான்
வேட்டைக்காரன் வர முன்னர் இதை நான் சொல்லியே ஆகவேண்டும்.

நானும் எனது நண்பர்கள் இருவரும் அமிர்தா உணவகத்திற்கு சென்று பூரி அருந்திக்கொண்டிருந்தோம் (உணவு அருந்துதல் என்று சொல்வார்களே, பூரியும் உணவுதானே). அன்று வெள்ளிக் கிழமை பக்கத்தில் கோயில் வேறு என்பதாலும் அமிர்தா ஒரு மரக்கறி உணவகம் என்பதாலும் நிறையப் பேர் வந்திருந்தார்கள். நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என்று பலர் வந்திருந்தார்கள்.

எனது நண்பர்களில் ஒருவன் படத்தில் உள்ளவாறு தலைமயிரை அழகாக வைத்திருந்தான்.
வந்திருந்த தெரிந்த பையன் ஒருத்தன், அவனுடைய அலப்பறை தாங்காமல் தூரத்திலேயே அவனைக்கண்டு ஓடி ஒளிப்பவர்கள் ஏராளம், தனது அலப்பறையை இங்கேயும் ஆரம்பித்துவிட்டான்.

எனது நண்பனைப் பார்த்து "டேய் இவனப் பார்றா... வில்லு வடிவேலு மாதிரி இருக்கிறான்...ஹா ஹா" என்று தன்னுடன் வந்திருந்தவர்களுடன் ஆரம்பித்துவிட்டான் அலப்பறையை. எனது நண்பனுக்கு முகம் கொஞ்சம் ஒரு மாதிரிப் போய்விட்டது. எனக்கும் கடுப்பாகிவிட்டது. மனதில் பட்டென்று உதித்தது. அந்தப் பையனைப் பார்த்து

"டேய் இவனப் பார்றா... வில்லு விஜய் மாதிரி இருக்கிறான்... ஹா ஹா" என்றேன். பிறகென்ன அவனுடன் வந்தவர்களும் சேர்ந்து சிரித்து பக்கத்தி்ல் இருந்த இரண்டு மூன்று மேசை ஆட்களே சிறிது நேரம் சிரித்துக் கொண்டிருந்தனர். அவனுடைய முகம் போன போக்கைப் பார்த்திருக்கவேணும். அவன் அண்டைக்கு அதுக்குப் பிறகு ஏதும் கதைக்கவில்லை.

(டாக்டர் விஜய் பவர் அப்படி...)

மூஞ்சிப்புத்தக மொக்கைகள்
நேற்று எனது பால்ய நண்பன் ஒருத்தனின் பிறந்தநாள். பாலர் வகுப்பிலிருந்து பல்கலைக் கழகம் வரை என்னுடன் ஒன்றாகப் படித்தவன் அவன். உயர்தரம் (A/L) அரைவாசி வரைக்கும் எனக்கு பள்ளிக்கூடம் போக சைக்கிள் இருக்கவில்லை. அதுவரை கிட்டத்தட்ட ஆறேழு வருடங்களாய் என்னை எனது வீடு வந்து தன்னுடைய சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போறவன் அவன். ஒண்டாத்தான் ரியூசனுக்குப் போறனாங்கள். இரண்டு பேரும் ஒரே உயரம். வகுப்பிலயும் வரிசைப்படி விட்டு இருத்திறதால நானும் அவனும் பக்கதத்தில பக்கத்திலதான் இருக்கிறானாங்கள்.


செத்துப் போட்டான் நாலைஞ்சு மாசத்துக்கு முதல்.

அவனது உடல் கூட எரிக்கப்பட்டதா, புதைக்கப்பட்டதா எண்டு தெரியேல.

மூஞ்சிப் புத்தகக்காரன் (Facebook) முந்தநாளில் இருந்து வந்து அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவி எண்டு மொக்கை போடுறான். போய்ப் பார்த்தா கவலையாக் கிடந்தது. மூஞ்சிப் புத்தகத்தில செத்தாக்களின்ர விபரம் பற்றி அவங்களுக்குத் தெரிவிச்சா அஞ்சலிக்காக மட்டும் அவர்களது பக்கத்தைத் திறந்துவிட்டு மற்ற விடயங்களை, இப்படி வாழ்த்துத் தெரிவி போன்ற விபரீதங்களை நிறுத்திவைக்கிறார்களாம். இதுபற்றி ஆதிரை எழுதியிருக்கிறார். போய்ப் பாருங்கோ. இறப்புக்குப் பின் Facebook http://kadaleri.blogspot.com/2009/11/facebook.html

இறப்பை அறிவிக்க காரணத்தைச் சுட்டவேணுமாம். என்ன செய்யிறதெண்டு தெரியேல. :(

கூகுள் பரிசோதனைக்கூடத்தின் கடுகு ஒன்று
ஆர்ப்பாட்டமே இல்லாம வந்த கூகுளின் பாஸ்ற்பிளிபை எத்தனை பேர் பாவிக்கின்றீர்கள். மிக மிக எளிமையான, அருமையான கூகுளின் தயாரிப்புகளில் ஒன்று.

http://fastflip.googlelabs.com/


நீங்கள் ஏலவே அதனைப் பாவிக்கின்றவராக இருப்பின் உங்கள் நாளாந்தப் பார்வைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இன்னும் பாவிக்க ஆரம்பிக்கவில்லையா சென்று பாருங்கள். குறித்த சொல்லைத் தட்டச்சி தேவையானவற்றைப் மட்டும் நுனிப்புல் மேய்ந்து தேவையெனின் மேலும் அடிப்புல் பார்க்கலாம். நேரத்தை நிர்வகித்து செய்திகள், தகவல்களைப் பார்க்க அருமையான தளம் இது.

(FastFlip - Simply Superb)

நோக்கியா - வெடிக்குமா
நீங்கள் நோக்கியா charger பாவிக்கிறவரா? குறித்த காலப்பகுதியில் விற்கப்பட்ட charger கள் ஆபத்தை விளைவிக்கக்கூடியவாறு இருக்குதாம். நோக்கியாவே சொல்லுது. இங்க போய்ப் பாருங்கோ...

http://chargerexchange.nokia.com/chargerexchange/en/

தங்களுக்கு இவ்வகைச் charger களால் ஏதாவது ஆபத்து ஏற்பட முன்னர் கொண்டுபோய் மாத்திக் கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கு வேண்டாதவரிடம் மாத்திக் கொல்லுங்கள்.


(ஏற்கனவே வெடிக்கிற செல்பேசிகளைச் செய்து இந்தியாவுக்கு விட்டு, இந்தியா வல்லரசா மாறுவதை தடுக்க சைனாக்காரன் முயலுறான் எண்டு ஏதோ ஒரு வலைப்பதிவில வாசிச்சனான்... :-) )

Charger க்கு என்ன தமிழ் வார்த்தை?


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

கூகுள் வேவும் கிலேசமும்
கூகுள் சில வேளைகளில் ஆர்ப்பாட்டமான விளம்பரங்களுடன் ஆரம்பிக்கும் சில தயாரிப்புகள் தானே தேடாத அளவுக்கு இணையத்தில் முகவரி இழந்து கிடக்கின்றன. உதாரணத்திற்கு Knol (http://knol.google.com) ஐக் குறிப்பிடலாம். கூகுளைக் கன்னா பின்னாவென்று காதலிக்கும் எனக்கு கூகுள் வேவ் கூட சிறிது கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கூகுள் வேவ் அடிப்படையி்ல் என்ன நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளது என்பது மில்லியன் டொலர் கேள்வியாக எல்லோர் முன்னும் விழுந்து கிடக்கிறது. வேவ் ஒன்றினைத் தொடங்கிவிட்டு அடுத்து என்ன செய்யவது என்று யோசித்துக் கிடப்பது எல்லோரினதும் வாடிக்கையாகிவிட்டது. என்றாலும் preview வாக இருக்கும் கூகுள் வேவானது முற்றாக எல்லோருக்கும் திறந்து விடப்படும்போது தனக்கென இடத்தைப் பிடிக்கும்போல் தெரிகிறது.

செயலி உருவாக்குநர்களுக்குகாக (Application Developers) திறந்துவிடப்பட்டிருக்கும் வேவ் இப்போது புதிய புதிய செயலிகளால் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வர்த்தக நோக்கிலான நிறுவனங்களின் பார்வையும் வேவின் மேல் அதிகமாக பட ஆரம்பித்துள்ளது. ஆனாலும் மூஞ்சிப்புத்தகம், ஹாய்5, Tagged, மைஸ்பேஸ் என்று மூழ்கி வெளியி்ல் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கிடக்கும் மாண்புமிகு மாந்தர்களை எவ்வாறு வேவ் தனக்குள் உள்வாங்கப்போகிறது...!!!
இலங்கையில் இரு இணைய நிகழ்வுகள்
இணைய ஆர்வலர்களுக்கான பயன்தரு நிகழ்வொன்றும், இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இரண்ரடாவது இனிய சந்திப்பும் இம்மாதமோ அல்லது வரும்மாதமோ நிகழவிருக்கிறது. இப்போதைக்கு இத்தகவலை மட்டுமே தரக்கூடியதாக இருந்தாலும் ஒரிரு கிழமைகளில் விபரங்களை வலைப்பதிவுகளில் பெறக்கூடியதாக இருக்கும்.

இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் குழுமத்தில் சேராத இலங்கைப் பதிவர்கள் இங்கே (http://groups.google.com/group/srilankantamilbloggers) சென்று உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் செய்யவேண்டிய நல்லவைகளை கூட்டாகவும் சேர்ந்து செய்யவோம்.
மூத்தபதிவர் வந்திப் பாலகனின் வாழ்த்துப்பா

அழகிய இலங்கையின் மூத்தபதிவர் (வயதிலல்ல) அழகிய வந்தியத்தேவனின் பிறந்தநாள் இன்று. அவர் நலமோடு என்றும் நன்றாக வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

அவருக்காக ஒரு வாழ்த்துப்பாடல் இதோ...

ரும்காலம் எல்லாம் நலமாக என்று
ந்நாளில் வாழ்த்துவோம் இப்பாலகனை
திரும்பிய திசைகளெல்லாம் இவன் புகழ்
லதரங்க இசையாய் பரவட்டும்
த்திருநாட்டின் மூத்த பதிவனிவன் என்று
தேகம் சிலிர்த்து சேர்ந்து பாடுவோம்
யதொரு தடையாகா வந்திப் பாலகனை
ன்புற வாழ்த்துவோம் இந்தத் திருநாளில்.

(தமிழ்க்கொலைகளை மன்னித்தருள்க)
இந்தியச் சிலந்தி மனிதன்
அண்மையில் ரிஷான் இந்தியாவைச்சேர்ந்த ஜோதிராஜ் பற்றி ஒரு இந்தியச் சிலந்தி மனிதன் (http://rishansharif.blogspot.com/2009/11/blog-post.html) என எழுதியிருந்தார். அவை உண்மைதானா என அறிய முற்பட்டு தேடிய வேளையில் யூரியூப்பில் அவரின் நிறைய சலனங்கள் கிடைத்தன. அவற்றிலொன்று இது. இச்சலனத்தைப் பார்ப்பவர்கள் 0.46 நேரத்தில் அவரைப் பாருங்கள். எவ்வளவு தன்னம்பிக்கை இருந்திருக்கவேண்டும் அவருக்கு.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது