நா

உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா நிலையில் ரேடியோ வேலைசெய்யாது.

அதற்குரிய மாற்று வழி கீழே வழங்கப்பட்டுள்ளது.

1. உபுண்டு இயங்குதளத்தில் Rythembox Music Player திறவுங்கள்


2. அதில் புதிய இணையத்தள  ரேடியோ ஒன்றினைத் திறவுங்கள்

  


3. வரும் பெட்டியில் http://vettrifm.net:8140 என்பதைத் தட்டச்சி add பொத்தானை அழுத்திவிடுங்கள்


பின்னர் Rythembox Music Player இல் Radio பகுதிக்குச் சென்று நீங்கள் சேர்த்துக்கொண்ட சுட்டியைப் பாருங்கள். அதன் மேல் இரட்டைச்சொடுக்குங்கள். இப்போது வெற்றி உங்கள் காதுகளில்...


Vettr FM : http://vettrifm.net:8140
Shakthi FM : http://www.priyan.ca:8000

UPDATE :  தற்போது  வெற்றி Fm இற்காக இந்தச் சுட்டியை பயன்படுத்துங்கள் http://76.73.21.74:8140

மேலுள்ள சுட்டிகள் எதிர்காலத்தில் மாறுபடலாம். இன்றைய தேதியில் இவை வேலை செய்கின்றன.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
- CowboyMathu

 

தேவையான பொருட்கள் :-
உழுத்தம் பருப்பு 100 கிராம்

மாவு 1/2 கிலோ
தே.எண் or ம.க.எண் 1/2 போத்தல்
உப்பு 1 மே கரண்டி
காலிமிரிஸ் 3 தே.கரண்டி
பெ,சீரகம் 1 தே.கரண்டி
கறிவேப்பிலை 15 நெட்டி

உழுத்தம் பருப்பை 2 மணி நேரம் உறவைத்துப் பின் வடித்துக் கொள்ள வேண்டும். மாவை அரித்து அதனுள் உப்பைச் சேர்த்து நன்றாகக் கையால் சேர்க்கவேண்டும். கறிவேப்பிலையை சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும். கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெ.சீரகம் மூன்றையும் மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். பின்பு உழுத்தம் பருப்பைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கலக்க வேண்டும். ரொட்டிப் பதம் வரும்வரை அடித்துக் குழைக்கவேண்டும். அதன்பின்பு லட்டு உருண்டையளவு உருட்டி ஒரு தட்டில் போடுங்கள். பிளாஸ்ரிக் மூடி (வடையளவு) ஒன்றை எடுத்து அதன் மேல் துளி எண்ணை பூசி உருண்டையை வைத்து இரு கைப் பெருவிரல்களால் தட்டையாகச் செய்யவேண்டும். செய்யும்போது வலது பெருவிரலால் எண்ணையில் தொட்டு உருண்டை மேல் தொட்டுவிட்டுத் தட்டையாக்கினால் சுகமாகத் தட்டுப்படும். தட்டியதை ஓர் தட்டில் ஒன்றுடன் ஒன்று முட்டாமல் வைக்கவேண்டும். முழுவதும் செய்த பின்பு தாச்சியில் எண்ணையை விட்டு மொறுகல் நிலை வரும்வரை பொரித்து எடுக்கவும். (சாமான்கள் போடும் போத்தல்களின் மூடி நல்லது) உப்பு, உறைப்பு போதாது விட்டால் அடுத்த தடவை செய்யும்போது கூடுதலாகச் சேர்க்கலாம். தந்த அளவில் அரைவாசியையும் முதலில் செய்யலாம். உப்பு மேசைக்கரண்டியால் மிகவும் கும்பலாக எடுக்கவேண்டாம்.
நன்றி.

அண்ணா வடை சுடுகிறார்.

பி.கு : பதிவர் சந்திப்பு இரண்டின்போது வழங்கப்பட்ட பருத்தித்துறை வடையை அம்மாதான் செய்வதாக இருந்தா. ஆனால் அவசரமாக ஊர் செல்லவேண்டிய தேவை அம்மாக்கு. என்ன செய்வது என்று யோசித்துவிட்டு இறுதியில் நாங்கள் செய்வதாக முடிவெடுத்தோம். தொடரூந்திற்கு நேரம் நெருங்கி விட்டிருந்த நேரத்தில் அவசர அவசரமாக அம்மா ஒரு காகிதத்தில் எழுதித்தந்ததுதான் இந்த வடை சுடும் முறை. வடைசுடுவதில் நான் பங்கெடுக்கவில்லை அந்தப் பதிவர் சந்திப்பின் அதிகார பீட உறுப்பினர்களில் ஒருவராக நான் இருந்ததால் வேலை அதிகம் இருந்தது. அண்ணா மதுவர்மன்தான் பங்கெடுத்தார்.

இந்த வடை சுடும் முறையை ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போது சந்தோசமும், சிரிப்பும் வரும்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ | cowboymathu

 

பதிவர் சந்திப்பு
இந்த முறையும் பதிவர் சந்திப்பு மிக நேர்த்தியான முறையில நடாத்தப்பட்டிருக்கிறது. கடந்ததை விட சந்தித்தத அனைவருக்குமிடையில் ஏதோ ஓர் ஒற்றுமை சம்மந்தப்பட்ட பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் தெரிகிறது. ஆனாலும் சந்திப்பின் இறுதியில் பதிவர்கள் தமக்குள் கலந்துரையாடவென தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் பதிவர்கள் அவ்வளவாக அளவளாவவில்லை. செய்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும். அடுத்த அதிகார மையம் இதனைக் கவனிக்குமா?
காவற்துறையும் கூட்டங்களும்
பதிவர் சந்திப்பு நடந்துகொண்டிருந்த வேளை காவற்துறை வந்திருந்து. சிஐடியும் வந்திருந்தது. நிச்சயமாக யாரோ ஒருவர் எமது சந்திப்புக் குறித்து அவர்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். வந்தவர்கள் தமிழ் ஆக்கள் சந்தித்துக் கதைப்பதில் கூட ஆர்வம் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சந்தேகப்பட்டுக் கேட்டது 'பல்கலைக்கழக மாணவர்கள் சந்தித்துக் கதைக்கிறீர்களா' என்பதே. சிவப்புத் துண்டு பக்காவாத்தான் அசையுது.
மேலதிக வாசிப்புக்கு http://aiasuhail.blogspot.com/2010/12/blog-post_22.html
வெற்றி TV
இலங்கையில் ஒளிபரப்பாகும் வெற்றி TV இற்கு என்ன நடந்தது. ஆரம்பத்தில் TBO நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக்கொண்டு இருந்தவர்கள் இப்போது தனியே சினிமா பாடல்களும் படங்களுமாக மட்டும் ஒளிபரப்புகிறார்கள். அதுவும் ஒவ்வொரு நாளும் அதே பாடல்கள்.
இஸ்லாம் - கிறிஸ்தவம்
இணையத்தில் உலவும்போது சுவாரசியமாக இருந்தது. மேலதிகமாக வாசிக்கவில்லை. இஸ்லாம் - கிறிஸ்தவம் - யூத மதஙகள் மூன்றும் பல ஒரே இயல்புகளைக் கொண்டிருக்குதாம். இஸ்லாம் - கிறிஸ்தவ மதப் பெயர்களின் ஒற்றுமையைப் பாருங்கள்
இப்ராகிம் - ஏப்ரகாம்
பாத்திமா - பற்றிமா
ஈசா - ஜீசஸ்
மூசா - மோசஸ்
தாவூத் - டேவிட்
யூசுப் - ஜோசப்
மேலதிகமாக வாசிக்கவேண்டும்.
பட உதவி http://pagentsprogress.com

பிரியமுடன்,
மதுவதனன் மௌ | cowboymathu

 

கொலைக் காற்று - 04


கொலைக்காற்று - 01  தரங்கம் - சுபாங்கன்

கொலைக்காற்று - 02  எரியாத சுவடிகள் - பவன்
கொலைக்காற்று - 03  சதீஸ் இன் பார்வை - சதீஸ்

********************************************************

கௌதம் அரண்டு படுத்துக்கொண்டான். தலையை லேசாகத் திருப்பி கௌதமை கலக்கத்துடன் பார்த்தாள் வர்ஷா. ஜன்னலூடான நிலா வெளிச்சத்தில் கண் திறந்திருக்கிறானா, மூடியிருக்கிறானா என்றே தெரியவில்லை. சிறிது நேரம் நின்று திரும்பி கௌதமையே பார்த்தாள். ம்ஹீம். கௌதம் தூங்குவதுபோல்தான் அவளுக்கப் பட்டது. சூடான மூச்சை ஆறுதலாக விட்டபடி அறைக்கதவைத் திறந்தாள் வர்ஷா.


"ஏன் இங்க வந்தாய்?" கண்கள் சுருக்கியபடி கேட்டாள் வர்ஷா.

"SMS அனுப்பீட்டுத்தான வந்தனான்" குரலில் எகத்தாளம் தொனித்தது.

"ஏன்? ஒரு கிழமை தொல்லை குடுக்காமத்தான இருந்தனீ. இப்ப என்ன வேணும் உனக்கு? நாங்கள் இங்க ஹோட்டல்ல தங்கியிருக்கிறது எப்பிடித் தெரியும் உனக்கு? உன்னை வரவேண்டாம் எண்டு SMS செய்தனான் இல்ல" கேள்விகள் எல்லாம் குழப்பமான குரலில்.

"ஒரு கிழமையே பெரிய விசயம் வர்ஷா. எப்பிடி புது மாப்பிளை? நல்லாக் களைச்சுப்போய் படுத்திருக்கிறார் போல. ம்ம்ம்... நைட்டியில உன்னைப் பார்த்தபடியே சாகலாம் போல." தலையை ஆட்டியபடி உதட்டைப் பிதுக்கினான்.

வர்ஷா கலக்கத்துடன் கோபமாய்ப் பார்த்தாள்.

"சரி, கொழும்பு வந்து வீட்ட தங்காமல் என்ன இது ஹோட்டல்ல?" கண்களைக் குறுக்கியபடி கேட்டான்.

"அது உனக்குத் தேவையில்லை. போலீசோட சகவாசம் வச்சிருக்கிற உனக்கு நாங்கள் இங்க தங்கியிருக்கிறது தெரிஞ்சிருக்கும் எண்டு யோசிச்சனான். வந்திட்டாய். உனக்கிப்ப என்ன வேணும்?"

"வேற என்னத்தக் கேக்கப்போறன் வர்ஷூ. நீதான். நான் உன்னைப் பிரஷ்ஷாக் கூட ஆசைப்படேல. ஒரே ஒரு முறை."

"விது... இது தப்பு விது. நான் உன்னைப் ப்ரண்டாத்தான் நினைச்சனான். நீ இப்பிடி ஒரு நிலைமைக்குக் கொண்டு வருவாய் எண்டு நான் யோசிக்கவே இல்லை. பார் இப்ப அந்தாளுக்குத் தெரியாம உன்னோட களவாய் கதைத்துக்கொண்டு. நீயெல்லாம் ஒரு மனிசனாடா விது." கிட்டத்தட்ட அழுதிருந்தாள் வர்ஷா.

கௌதம் மீண்டும் அரண்டு படுத்துக்கொண்டான்.

"பார் அவன. பொறின் காரன் எண்டா கோப்பிறேற் பண்ணுவீங்கள் போல. எங்களுக்கு மாட்டீங்களோ."

வர்ஷாவுக்கு கண்கள் நிரம்பியிருந்தன.

"யே... முதல்ல கண்ணைத் துடை. அழகான பெண்கள் அழக்கூடாது."

சிறிது நேரம் யோசித்தவன்... "போட்டோ கொண்டு வந்திருக்கிறன்."

"எத்தனை தரம்தான் அதைக்காட்டிப் பயமுறுத்துவாய் விது. உந்தப் போட்டோவைப் பாக்கேக்க எல்லாம்.. சீ.. தூ.. ப்ரண்சிப்பையே கொச்சைப் படுத்தின நீயெல்லாம் ஒரு மனிசனா? றிப்புக்கு போன இடத்தில லேடீஸ் பாத்ரூமுக்குள்ள இருந்து நீ வெளியில வரேக்கயே யோசிச்சிருக்கோணும். நான் ப்ரண்சிப்பை நம்பினன் விது. ஏன்டா இப்பிடிப் போட்டோ எடுத்து வெருட்டுறாய்?"

"வர்ஷூ.. இது அந்தப் போட்டோ இல்ல. இது வேற. அந்தப் போட்டோக்களை இப்ப ஞாபகப் படுத்தாத. சே... அந்தப் போட்டோக்களில் நீ என்ன அழகடி. உனக்காகச் செத்தாலும் பரவாயில்லை. சரி விடு. அந்தப் போட்டோக்களை நினைச்சாலே ஹார்ட் உதறுது. ம்ம்ம்... இது வேற போட்டோ வர்ஷூ"

"முதல்ல வர்ஷூ எண்டு கூப்பிடுறத நிப்பாட்டு. அத விட வேற என்னடா போட்டோ வச்சிருக்கப்போறாய். வேற எங்கயும் அதேபோல எடுத்தியா?"

"இல்லை வர்ஷூக்குட்டி" சிரித்தான்.

"ஏன்டா.. வேண்டாம் நீ வர்ஷூ எண்டே கூப்பிடு"

"இது... உன்ர ஆளின்ட போட்டோ. பார் ஆளை. திருப்தியாய் நித்திரை கொள்ளுறான். என்னைத்தான் இப்பிடி அலையவிடுறாய்".

"என்ன. அவற்ர போட்டோவா?" இமைகளைச் சுருக்கியபடி சந்தேகமாய்க் கேட்டாள் வர்ஷா.

"போட்டோவைப் பார். பிறகு சந்தேகப்படு. இந்தா போட்டோ" காகோ டவுசரிலிருநத பெரிய பொக்கற்றிலிருந்து எடுத்துக் கையில் அழுத்தி வைத்தான் விது.

என்வெலப்பிலிருந்து போட்டோவை வெளியிலெடுத்தவளுக்கு வெளிச்சம் போதவில்லை.

"சுவருக்கு இந்தப்பக்கம் வெளியில வா வர்ஷூ. போன் டோச் இருக்கு பார்". போனை வெளியிலெடுத்தான்.

புகைப்படத்தில் ஜெனியில் தோளில் கைபோட்டவாறே சேர்ந்து சிரித்துக்கொண்டிருந்தான் கௌதம்.

நிமிர்ந்து விதுவை கோபமாகப் பார்த்தவள்... "இதில என்ன இருக்கு? அதுக்கு முதல் இந்தப் போட்டோ எப்பிடி உனக்குக் கிடைச்சது?"

"எப்பிடிக் கிடைச்சது எண்டது மாட்டர் இல்லை வர்ஷூ. போட்டோவைப் பாத்தியா. ஆரார் நிக்கிறதெண்டு?"

தலையச் சிறிது சரித்தவள்... "தெரீது. கௌதமும் ஜெனியும்"

"என்ன வர்ஷூ. சிம்பிளாச் சொல்லுறாய். கௌதம் ஜெனியை காதலிச்சது தெரியுமா? பிறகு அனுபவிச்சு ஏமாததிப்போட்டு இப்ப உன்னோட... இதை சிம்பிளா எடுக்கிறியே" குரலில் ஆச்சரியம் கலந்திருந்தது.

"இப்ப என்ன சொல்ல வாறாய் வி்து? கௌதம் ஜெனியை ஏமாத்திட்டு என்னோட இருக்கிற மாதிரி, நான் கௌதமை ஏமாத்திட்டு உன்னோட வரவேணுமா?"

"நீ படிச்சவள் வர்ஷூ. டக்கெண்டு விளக்குது. அதுவும் நான் என்னோட வரச்சொல்லிக் கேக்கேல. ஓரே ஒரு நாள். நீ என்னோட வந்தாலும் தப்பில்ல. நியாயம்தான் எண்டு காட்டத்தான் இந்தப் போட்டோ."

"விது... கௌதம் ஜெனியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். பொறின்ல லவ்பண்ணினது பற்றியும் சொன்னவர். ஆனா அவர் ஜெனியை மோசமா ஏமாத்தேல. இந்தப் போட்டோவ முதல்ல சுருட்டிப் பொக்கற்றுக்குள்ள வை. அது சரி இந்தப் போட்டோ எப்பிடி உனக்குக் கிடைச்சது?" சந்தேகம் தொனித்தது.

விதுவின் முகம் சுரத்தை இழந்திருந்தது... "வர்ஷூ... நீ புது மாப்பிளை சொல்லிற எல்லாத்தையும் நம்புறாய்."

"விது. யோக்கியம் கதைக்கிறியா... அதை விடு. இந்தப் போட்டோ எப்பிடிக்கிடைச்சது?"

"எப்பிடிக்கிடைச்சா உனக்கென்ன?"

"விது... உனக்கு போலீஸ் சகவாசம் இருக்கெண்டு தெரியும். ஆனா இந்தளவுக்கெண்டு தெரியாது. இண்டைக்கு காலமை இன்ஸபெக்டர் சூர்யபிரகாஷ் இங்க வந்தவர். இந்தப் போட்டோவைக் காட்டி கௌதமோட ஏதோ கதைத்துக்கொண்டிருந்தவர். நான் கிட்டப் போனதும் கௌதமை மறச்சுக்கொண்டு ஜெனியை மட்டும் காட்டினவர். இந்தப் போட்டோவைப் பற்றி நான் கௌதமோட பிறகு கதைக்கிறன். உனக்கெப்பிடி இது கிடைச்சது?" கண்களை நேரே பார்த்தாள் வர்ஷா.

"தெரியுதில்ல... அதை விடு. உன்ர மற்றப் போட்டோக்கள் என்னட்டத்தான் கிடக்கு. உலகம் இன்ரர்நெற், ஈமெயில் எண்டு சுருங்கி வேற கிடக்குது." குரலில் ஏளனம் தொனித்தது.

 பெருமூச்செறிந்தாள் வர்ஷா... "நடக்காத விசயங்களுக்கு மினக்கடாதே விது. என்னையும் கௌதமையும் சுற்றி ஏதோதோ நடக்குது. ஜெனி... சேகர்..."

"எனக்கென்னவோ, புதுப்பொண்டாட்டி ஆசையில ஜெனியை கௌதம்தான் போட்டுத்தள்ளியிருப்பான் போல" நமட்டுச் சிரிப்புச் சிரித்தான் விது.

"விது. விசர்க்கதை கதையாதே. நாங்கள் கண்டியில இருந்தனாங்கள் அப்ப"

கௌதம் மீண்டும் அரண்டு படுத்துக்கொண்டான்.

"விது... இனியும் என்னால நிக்கேலாது. அவர் எழும்பிடுவார்."

"ஓரே ஒரு நாள் வர்ஷூ.  அதுக்குப் பிறகு உனக்கு இந்தப் பயமெல்லாம் இருக்காது."

"அது நடக்காது. நான் போறன்."

"ம்ம்ம்.. பார்ப்போம். நீ என்ர ப்ரண்ட் எண்டபடியாத்தான் இதுவரை அந்தப் போட்டோக்களை வெளியில விடேல. இப்பிடியே தொடர்ந்து இருக்கமாட்டேன் வர்ஷூ"

"தூ.. ப்ரண்ட் எண்டு சொல்லாத"

"சரி போ போ... அவர் எழும்பீடப்போறார். இந்தக் ஹோட்டல்ல கீழ் புளோரில 23 ஆம் நம்பர் ரூமிலதான் நான் இருக்கிறன். எப்பவும் எவைலபில். ஓகேயா"

"சரி போ போ" பல்லைக் கடித்தாள் வர்ஷூ.

***************************************************


அறைக் கதவை மெதுவாகச் சாத்தியவள்,  பாத்ரூம் கதவை சிறிது சத்தத்துடன் திறந்து உள்ளே சென்றாள். நிறைக் கலக்கங்கள் வந்து போயின. விது, றிப் போட்டோ, இன்ஸ்பெக்டர் சூர்யபிரகாஷ், கௌதம், ஜெனி, மீண்டும் போட்டோ.. நிறையக் குழப்பங்களுடன் பாத்ரூம் கதவை சாத்திவிட்டு கட்டிலில் படுத்தாள் வர்ஷா.

கையை மேல போட்ட கௌதம்... "என்ன குட்டியா? உடம்புக்கு ஏதாவது?"

"ஓண்டுமில்ல கௌதம். பாத்ரூம் போய் வந்தனான்"

"படுக்கேக்கதானே பாத்ரூம் போய் வந்தனாங்கள்" சிரித்தபடி கேட்டான் கௌதம்.

"சும்மா இருங்கோ.. அதுக்கு.. இதெல்லாம் என்ன சொல்லிவச்சா வரும்"

"ஏன் குட்டியா சலிக்கிறாய். நல்லாக் கஷ்டப்படுத்தீட்டனா?"

"இல்ல கௌதம். எல்லாத்தையும் நினைக்கக் குழப்பமாக் கிடக்குது. ஜெனி, சேகர்..."

"ஆரம்பிச்சிட்டியா.. ஜெனியும் சேகரும் என்ர பிரண்ட்.. நான் எல்லாம் சொல்லியிருக்கிறன்.. கவலைப்படவேண்டியது நான்... நானே குழப்பமில்லாம இருக்கிறன்...." இழுத்தான் கௌதம்

"அதுதான் எனக்குக் குழப்பமாக் கிடக்குது கௌதம்..."

கட்டிலில் இருந்து எழுந்தே விட்டான் கௌதம். 

"நீ என்ன சொல்ல வாறாய் வர்ஷா? "

*************************************************************

கட்டிலில் என்ன நடந்தது? மறுநாள் என்ன நடந்தது? இனி லோசனின் கைகளில்.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ | cowboymathu

 

எல்லோருக்கும் இந்தப் பிரச்சினை வரும் எண்டில்லை. ஆனால் வந்தால் என்ன செய்யிறது? எங்கேயோ ஒரு சந்தர்ப்பத்தில உங்களுக்கும் உதவும் எண்டு சொல்லி வைக்கிறன். அல்லது இந்தத் தீர்வை வேற ஒரு சந்தர்ப்பத்தில நீங்கள் பாவிக்கக்கூடியமாதிரியும் இருக்கும்.

என்னெண்டா அண்டைக்கு வேலைத்தளத்தில் Gmail இல் Buzz ஐப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு புதிய பஸ் வந்தது. கீழே சாடை மாடையாப் போட்டிருக்கிறன். சொடுக்கிப் பாருங்கோ.





அந்த மேலே உள்ள பஸ் NSFW. அப்ப வீட்டில வச்சுப் பார்த்துக்கொண்டே இருக்கலாமோ எண்டெல்லாம் கேக்கக்கூடாது.

பார்த்துக்கொண்டிருந்தது வேலைத்தளத்தில். பக்கத்ததில், பின்னால எல்லாம் வேலை செய்யிறாக்கள் இருக்கினம். பொம்புளைப் பிள்ளைகளும் இருக்கினம். படாரெண்டு கீழே ஸ்குரோல் செய்திட்டன். (மேசைக்குக் கீழே குரோள் செய்யேல). அதையும் சொடுக்கிப் பாருங்கோ கீழே.




கொடுமை. Gmail காரன்கள் இன்பொக்ஸூக்குத் திருப்பிப் போகவோ அல்லது Buzz இல் இருந்து வெளியில வரவோ ஒரு வழியும் வைக்கேல. மேல ஸ்குரோல் செய்துதான் போகவேணும். மேல ஸ்குரோல் செய்தால் ஹீ ஹீ.

என்ன செய்யலாம்? உடனே நான் செய்தது. மேல Address Bar இல் உள்ள buzz என்பதை inbox என்று மாற்றிவிட்டு Enter செய்ததுதான். :)

https://mail.google.com/mail/u/0/?hl=en&shva=1#buzz இனை
https://mail.google.com/mail/u/0/?hl=en&shva=1#inbox என மாற்றிவிட்டு Enter செய்தேன்.

உங்களுக்கும் எங்கேயாவது உதவும். சும்மா குறிச்சு வச்சுக்கொள்ளுங்கோ.


பி.கு : அசோக்பரனின் பெயரில் சொடுக்கியிருந்தாலும் பிரச்சினை தீர்ந்திருக்கும்.
inbox ற்குப்பதிலாக mbox என்றுபோட்டிருந்தாலும் பிரச்சினை தீர்ந்திருக்கும்.
பிறகுதான் பார்த்தேன் gmail shortcut 'g then i' இனைப் பாவித்திருந்தாலும் நேரடியாக இன்பொக்சுக்குப் போயிருப்பன்.

பதிவில போட்டுப் பப்ளிக் ஆக்கியிருக்கிற பஸ்ஸை வேலைத்தளத்தில மட்டும் பாக்கேலாமப் போச்சோ உனக்கு, என்று கேட்பவர்களுக்கு - அது ஒரு அசையும் படம். படத்தைப் பார்த்தால் கொஞ்சநேரம் அசையாமல் நிப்பியள் :D

பிரியமுடன்,
மதுவதனன் மௌனசாமி - cowboymathu