நா

மு.கு: இந்த இடுகையை வாசிக்க முன்னர் சந்தியாவுக்கு ஒரு காதல் கடிதம் - ஆகாஷ் எனும் இடுகையை வாசியுங்கள்

சந்தியா ஆகாஷூக்கு பதில் கடிதம் எழுதுறாள். அதுவும் ஆகாஷினுடைய கடிதம் போலவே கேள்வி-பதில் வடிவத்திலேயே இருக்கிறது.



அன்புள்ள ஆகாஷ்,

பின்வரும் ஆம் / இல்லை கேள்விகளுக்கு விடை தருக.

1. வகுப்பறையில் நுழையும் ஒருவர் சாதரணமாக, முதல் வரிசையில் இருக்கும் ஒருவரைப் பார்ப்பார்.

  1. ஆம்
  2. இல்லை
2. ஒரு பெண் சிரித்தவாறே ஒருவரைப் பார்த்தால் அது தற்செயலானதாய் இருக்க முடியாதா?
  1. ஆம்
  2. இல்லை
3. பாடும்போது ஒருவர் பாடல் வரிகளை மறந்தால், அவர் பாடுவதை நிறுத்துவார்.
  1. ஆம்
  2. இல்லை
4. நான் என் பெண் நண்பிகளுக்கு எனது சிறு வயதுப் புகைப்படத்தைக் காட்டும்போது நீ உன் மூக்கை நுழைத்தாய். சரியா?
  1. ஆம்
  2. இல்லை
5. பேருந்தை தவறவிட்டு ஏறும்போது ஏன் நான் உன் கையைப் பிடிக்கவில்லை என்பது இப்போது உனக்கு விளங்குகிறது.
  1. ஆம்
  2. இல்லை
6. எனது தோழி அஞ்சலிக்காக நான் பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்தால் அது சரி.
  1. ஆம்
  2. இல்லை
7. ஒரு நண்பனாக உன்னை எனது பெற்றோர்களுக்கு அறிமுகப்படுதியிருந்தால் அது சரி.
  1. ஆம்
  2. இல்லை
8. நீ உனக்கு தாமரைப்பூ, வாழைப்பூ மற்றும் தேங்காய்ப்பூ எல்லாம் பிடிக்கும் என்று கூறினாய்.
  1. ஆம்
  2. இல்லை
9. ஓ..அன்று உனது பிறந்த நாளா? அதுதான் உன்னை கோயிலில் காணக்கூடியதாக இருந்ததா! நான் ஒவ்வொரு நாளும் கோயிலுக்குப் போவது உனக்குத் தெரியுமா?
  1. ஆம்
  2. இல்லை
  • இதில் ஏதாவது ஒரு கேள்விக்கு நீ ஆம் என்று பதிலளித்தால், நான் உன்னைக் காதலிக்கவில்லை.
  • இல்லை என்று பதிலளித்தால் காதல் என்றால் என்ன என்று இன்னும் நீ விளங்கிக் கொள்ளவில்லை.
எல்லாம் தெளிவடைந்திருப்பாய் என்ற நம்பிக்கையுடன்...

உன் நண்பி,
சந்தியா.

 



கல்லூரிப் பையன் ஆகாஷ் தனது வகுப்பு நண்பி சந்தியாவுக்கு வித்தியாசமான வடிவத்தில ஒரு கடிதம் எழுதுறான்.



என் அன்புள்ள சந்தியா,

கீழே உள்ள வினாக்களுக்கு விடை தருக.
அ. இற்கு 10 புள்ளிகள்
ஆ. இற்கு 5 புள்ளிகள்
இ. இற்கு 3 புள்ளிகள்

1. நீ எப்போது வகுப்பறைக்குள் வந்தாலும், உன்னோட பார்வை என்மேலயே இருப்பது ஏன்?
அ. காதலினால்
ஆ. உன்னால என்னைப் பாக்குறதைக் கட்டுப்படுத்த முடியவில்லை
இ. உண்மையாகவா!!! நான் அப்படிச் செய்கிறேனா?

2. ஆசிரியர் ஏதும் சொன்னால், நீ சிரித்துவிட்டு என்னை நோக்கித் திரும்பிப் பார்ப்பது ஏன்?
அ. நீ எப்போது சிரித்தபடியே என்னைப் பார்க்க விரும்புகிறாய்
ஆ. எனக்குப் பகிடி பிடிக்குமா என நீ சோதிக்கிறாய்
இ. நீ எனது சிரிப்பில் ஈர்க்கப் பட்டிருக்கிறாய்

3. நீ ஒரு நாள் பாடிக் கொண்டிருக்கும்போது, நான் வகுப்பறைக்குள் நுழைந்ததும் பாடுவதை நிறுத்தியது ஏன்?
அ. எனக்கு முன்னால பாட உனக்கு நாணம்
ஆ. நான் வந்தது உனக்கு ஏதோ தாக்கம்
இ. எனக்கு உன்னோட குரல் பிடிக்குமா பிடிக்காதா என்ற பயம்

4. நீ உன்னோட குழந்தை வயதுப் புகைப்படத்தை தோழிகளுக்குக் காட்டும்போது, நான் கேட்க நீ தராமல் மறைத்தது ஏன்.
அ. உனக்கு வெட்கம்
ஆ. உனக்கு கூச்சம்
இ. ஏனென்று புரியவில்லை

5. நீ பேருந்தைத் தவறவிட்டு ஓடி வந்து ஏறும்போது நான் கையைக் கொடுத்தும் நீ எனது நண்பனின் கையையே பிடித்து ஏறியது ஏன்?
அ. நான் குழப்பமடைவதை ரசிப்பதற்கு
ஆ. எனது கையை பிடித்து ஏறி பின்னர் உன்னால் விலக முடியாது என்பதால்
இ. ஏனென்று புரியவில்லை

6. நேற்று நீ பேருந்திற்காகக் காத்திருந்து அது வந்தும்கூட நீ ஏறவில்லை. ஏன்?
அ. நீ எனக்காகக் காத்துக்கொண்டிருந்தாய்
ஆ. என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த படியால் தவறவிட்டுவிட்டாய்
இ. பேருந்து சனக்கூட்டத்தால் நிறைந்திருந்தது

7. உனது பெற்றோர்கள் கல்லூரிக்கு வந்திருந்தபோது என்னை நீ அவர்களுக்கு அறிமுகப் படுத்தினாய். ஏன்?
அ. நான் உனது கணவனாகப்போகிறவன் ஆகையால்
ஆ. உனது பெற்றோர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நீ அறியவேண்டும் போல இருந்ததால்
இ. ஏதோ என்னை அறிமுகப் படுத்தவேண்டும் போல் இருந்தது

8. நான் ஒரு நாள் எனக்கு பெண்கள் ரோஜா அணிவது பிடிக்கும் என்றவுடன், அடுத்தநாள் நீ தலையில் ரோஜாவுடன் வந்தது ஏன்?
அ. எனது விருப்பத்தைப பூர்த்தி செய்ய
ஆ. ரோஜாவை உனக்கும் பிடிக்கும்
இ. ஏதேச்சையாக நடந்தது

9. எனது பிறந்தநாள் அன்று நீயும் கோயிலுக்கு அதிகாலையிலேயே வந்திருந்தாய் ஏன்?
அ. என்னோட சேர்ந்து நீயும் கடவுளை கும்பிட வேணுமென்று
ஆ. யாரும் என்னைச் சந்திக்க முதல் நீயே என்னை சந்திக்க வேண்டும் என்பதால்
இ. நீ என்னை கோயிலில் வாழ்த்த வேணுமென்று உளமார விரும்பினாய்

  • 40 இற்கு மேல் புள்ளிகள் வந்தால், நீ என்னை காதலிக்கிறாய்.
  • 30 – 40 இற்குள் புள்ளிகள் வந்தால் காதல் உனது இதயத்தில் உள்ளது எப்போது வெடிக்கும் எனத் தெரியாதவாறு.
  • 30 இனைவிட புள்ளிகள் குறைவெனின் நீ என்னைக் காதலிப்பதா இல்லையா என்ற குழப்பத்தில் உள்ளாய்.
சந்தியா, உன்னிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டே இருக்கிறேன்.

என்றும் பிரியமுள்ள,
ஆகாஷ்


சந்தியாவிடமிருந்து பதில் வந்ததா? அல்லது அவள் நேரடியாகத் தன் காதலைச் சொன்னாளா? எதிர்பாருங்கள் அடுத்த பதிவில்

 

கல்யாணத்திற்கு முன்னரும், கல்யாணத்திற்குப் பின்னரும் எப்படி ஆணும் பெண்ணும் இருப்பார்கள் என்பதை அறிய விருப்பமா? கீழே வாசியுங்கள்...


க.மு இருக்கிறது, சரி க.பி எங்கே எனத் தேடவேண்டாம். அப்படியே கீழிருந்து மேலே வாசியுங்கள். அவ்வளவுதான்.

அனுபவப் பட்டவர்கள் இதன் உண்மைத் தன்மையையும், அனுபவிக்கப் போகிறவர்கள் ஏதாவது தீர்வுகளையும் பின்னூட்டங்களில் வீசிச் செல்லாம்

 

சின்னக் குட்டியார் இங்கேயும் , மதுவர்மன் இங்கேயும் சாய்பாபா பற்றிய பிபிசியின் விவரணச் சித்திரத்தை பதிந்திருந்தார்கள். இரண்டும் ஒரே சலனப்படங்களையே கொண்டிருக்கின்றன். வாசகர்கள் ஏதாவது ஒன்றையாவது பாருங்கள்.

இங்கே அதில் வரும் ஒரு காட்சி வெவ்வேறு கோணங்களில் குறைந்த வேகத்தில் காட்சிப் படுத்தப்படுகின்றது.



காட்சியை வடிவாக உற்று நோக்குங்கள். அவர் லிங்கத்தை அந்த கைத்துண்டில் வாயிலிருந்து எடுப்பதாகப் பாவ்லா காட்டும்போது வாய் திறக்கவேயில்லை. மேலும் அவர் மேலேயுள்ள கைவிரல்களுக்குள் லிங்கம் வாயிலிருந்து வந்ததுபோல செய்திருந்தாலும் பின்னர் உள்ளங்கைப் பகுதியிலுள்ள துண்டிலிருந்தே லிங்கத்தை எடுக்கிறார்.

ஏற்கனவே கைத்துண்டில் லிங்கத்தை வைத்துவிட்டு வாயிலிருந்து எடுப்பதுபோல் என்னமாய் கப்ஸா விடுகிறார் கடவுள்.

 

எங்கட இடங்களில மட்டும் இந்தப் பிரச்சினை இல்ல. எல்லா இடமும் அதே கதிதான். உதாரணத்துக்கு கொஞ்ச படங்களைப் பாருங்கோ.

இது இரண்டும் மொஸ்கோவில



இது இத்தாலியில


இது இரண்டும் சீனாவில



இது ஆர்மேனியாவில


இது பிரேசிலில்


இது வெனிஸில


இந்த இடங்களில எல்லாம் டிராபிக் பொலிஸ் இல்லாட்டி கதை கந்தல்தான். ஆனா இந்தியாவுல மட்டுந்தான் ஜனங்கள் தாங்களாகவே டிராபிக்கை சமாளிச்சுக்கொண்டு போவாங்க, பொலிஸ் இல்லாட்டியும் கூட. இத பாத்து அறிஞ்சு கொள்ளுங்க இந்திய மகா ஜனங்களோட திறமையை.