நா

கணிணியும் மயிரும்
கணிணி முன்னால் நிறைய நேரம் இருந்தால் (இது சும்மா இருக்கிறதில்லை, அதைப் பாவிக்குறதுதான்) தலை மயிர அதிகமாக உதிரும் என்பது உண்மையெனினும் அதற்கான காரணம் கணிணிப் பாவனையல்ல. சரியான உறக்கமின்மை, ஓய்வின்மை, மன உளைச்சல் மற்றும் மன அழுத்தமே காரணங்கள்.


இறந்தபின் மயிர் வளருமா?
இதற்கான விடை இந்த நேரத்தில் பலபேருடைய ஐயத்தை தீர்த்துவைக்கும் என்பதாலும், அநேகமானோர் இந்தக் கேள்விக்கான விடை பற்றிய குழப்பத்தை நீண்டகாலமாகவே கொண்டிருப்பதாலும் அவசியமாகிறது.

மயிர் என்பது புரோட்டீனாலான ஒரு இழை. அதன் வளர்ச்சிக்கான செயற்பாடான வளர்சிதை மாற்றத்துக்கான (metabolism) ஊட்டப்பொருட்கள் (nutrient) இன்றி அது வளராது. நகத்தின் வளர்ச்சிக்கும் இதுவே செயற்பாடு.

இறந்தபின் நீர் உலர்தலாலும் சுருங்குதலாலும் முகத்தில் ஏலவே இருந்த தாடியோ மீசையோ வளர்ந்தது போலவும், தலைமயிர் நீண்டது போல் தெரிவதும் ஒரு மாயையே. நீரினுள் கிடக்கும் இறந்த உடல்களுக்கு இந்த மாயையும் தெரியாது என்பதைக் கவனத்திற் கொள்க.

விரல் நுனி சுருங்கி உலர்வதால் இறந்த உடலில் நகம் வளர்வது போல் தெரிவதும் ஒரு செயற்பாடே. இறந்த பின் இரத்த ஓட்டமின்றி எந்தவித ஊட்டப்பொருட்களும் எந்தவித வளர்சிதை மாற்றங்களுக்கும் செலுத்தப்படாது என்பதால் இறந்தபி்ன் மயிரோ நகமோ வளர்வது இல்லை.
மயிர்ச் சந்தேகம்
"சும்மா மசிர்க் கதை கதையாத" எனப் பாவிப்பதிலிரும் "என்ன மயிரா போச்சு" என்பதிலும் மயிரானது தாழ்நிலைப் பொருளாகவும் உயர்நிலைப் பொருளாகவும் பாவிக்கப்படுவதன் காரணம் என்ன? :-) யாராவது பின்னூட்டமிடுங்கோ தெரிந்தால்.

தலைமுடி உதிர்தல் கவலைப்படுதற்குரிய நிகழ்வா?
ஒவ்வொருநாளும் முழுகும்போதும், தலைவாரும்போதும் அடப்பாவி இவ்வளவு மயிர் உதிர்கின்றதே என்ற கவலை பெண்களுக்கும் இருக்கின்றதெனினும் ஆண்களுக்கு அதிகம்தான். இந்த அர்த்தமில்லாக் கவலையால் வரும் மன உளைச்சலால் மேலும் அதிகமாக மயிர் உதிரும் என்பதை யாரும் உணர்வதில்லை.

சாதாரண் மயிருதிர்வு பற்றி அறிந்திருத்தல் மிக்க அவசியம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு நாளும் சாதாரணமாக 10 தொடக்கம் 100 மயிர்கள் உதிர்ந்துகொண்டேயிருக்கும். இது ஒரு இயற்கையான சாதாரண நிகழ்வு. அப்போ முற்றிலும் வழுக்கையானவர்களுக்கு இது நிகழ்வதில்லையே என்று கேட்டால் அப்பாவித்தனமாக முகத்தை வைப்பதைத் தவிர வேறொன்றுமறியேன். இந்தச் சாதாரண நிகழ்வுக்கு எந்தவிதமான சிகிச்சைகளும் அவசியமில்லை. உலகம் சுற்றிக்கொண்டிருப்பதைப் போல இதுவும் நடந்துகொண்டே இருக்கும்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

4 பின்னூட்டங்கள்.

Anonymous May 21, 2009 at 8:13 PM

Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.

( Nile Raja )

Mathuvathanan Mounasamy / cowboymathu May 21, 2009 at 9:10 PM

வாங்கோ Nile Raja,

சினிமாக்கள் கொஞ்சம் அதிகமா பாக்குறீங்கள் போல :D

அவருக்கென்று தனித்தன்மை இருக்குதுதான்.

மது.

ARV Loshan May 22, 2009 at 4:40 PM

:) vilanguthu.. ;)

Mathuvathanan Mounasamy / cowboymathu May 23, 2009 at 12:04 PM

லோஷன் அண்ணா,

எங்களால இப்படிப்பதிவுகள் தான் போடமுடியுது. :) இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரம் பாதாளம் வரை பாயும் :(

பிரியமுடன்,
கௌபாய்மது

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ