நா

மு.கு: இந்த இடுகையை வாசிக்க முன்னர் சந்தியாவுக்கு ஒரு காதல் கடிதம் - ஆகாஷ் எனும் இடுகையை வாசியுங்கள்

சந்தியா ஆகாஷூக்கு பதில் கடிதம் எழுதுறாள். அதுவும் ஆகாஷினுடைய கடிதம் போலவே கேள்வி-பதில் வடிவத்திலேயே இருக்கிறது.



அன்புள்ள ஆகாஷ்,

பின்வரும் ஆம் / இல்லை கேள்விகளுக்கு விடை தருக.

1. வகுப்பறையில் நுழையும் ஒருவர் சாதரணமாக, முதல் வரிசையில் இருக்கும் ஒருவரைப் பார்ப்பார்.

  1. ஆம்
  2. இல்லை
2. ஒரு பெண் சிரித்தவாறே ஒருவரைப் பார்த்தால் அது தற்செயலானதாய் இருக்க முடியாதா?
  1. ஆம்
  2. இல்லை
3. பாடும்போது ஒருவர் பாடல் வரிகளை மறந்தால், அவர் பாடுவதை நிறுத்துவார்.
  1. ஆம்
  2. இல்லை
4. நான் என் பெண் நண்பிகளுக்கு எனது சிறு வயதுப் புகைப்படத்தைக் காட்டும்போது நீ உன் மூக்கை நுழைத்தாய். சரியா?
  1. ஆம்
  2. இல்லை
5. பேருந்தை தவறவிட்டு ஏறும்போது ஏன் நான் உன் கையைப் பிடிக்கவில்லை என்பது இப்போது உனக்கு விளங்குகிறது.
  1. ஆம்
  2. இல்லை
6. எனது தோழி அஞ்சலிக்காக நான் பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்தால் அது சரி.
  1. ஆம்
  2. இல்லை
7. ஒரு நண்பனாக உன்னை எனது பெற்றோர்களுக்கு அறிமுகப்படுதியிருந்தால் அது சரி.
  1. ஆம்
  2. இல்லை
8. நீ உனக்கு தாமரைப்பூ, வாழைப்பூ மற்றும் தேங்காய்ப்பூ எல்லாம் பிடிக்கும் என்று கூறினாய்.
  1. ஆம்
  2. இல்லை
9. ஓ..அன்று உனது பிறந்த நாளா? அதுதான் உன்னை கோயிலில் காணக்கூடியதாக இருந்ததா! நான் ஒவ்வொரு நாளும் கோயிலுக்குப் போவது உனக்குத் தெரியுமா?
  1. ஆம்
  2. இல்லை
  • இதில் ஏதாவது ஒரு கேள்விக்கு நீ ஆம் என்று பதிலளித்தால், நான் உன்னைக் காதலிக்கவில்லை.
  • இல்லை என்று பதிலளித்தால் காதல் என்றால் என்ன என்று இன்னும் நீ விளங்கிக் கொள்ளவில்லை.
எல்லாம் தெளிவடைந்திருப்பாய் என்ற நம்பிக்கையுடன்...

உன் நண்பி,
சந்தியா.

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

0 பின்னூட்டங்கள்.

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ