நா



கல்லூரிப் பையன் ஆகாஷ் தனது வகுப்பு நண்பி சந்தியாவுக்கு வித்தியாசமான வடிவத்தில ஒரு கடிதம் எழுதுறான்.



என் அன்புள்ள சந்தியா,

கீழே உள்ள வினாக்களுக்கு விடை தருக.
அ. இற்கு 10 புள்ளிகள்
ஆ. இற்கு 5 புள்ளிகள்
இ. இற்கு 3 புள்ளிகள்

1. நீ எப்போது வகுப்பறைக்குள் வந்தாலும், உன்னோட பார்வை என்மேலயே இருப்பது ஏன்?
அ. காதலினால்
ஆ. உன்னால என்னைப் பாக்குறதைக் கட்டுப்படுத்த முடியவில்லை
இ. உண்மையாகவா!!! நான் அப்படிச் செய்கிறேனா?

2. ஆசிரியர் ஏதும் சொன்னால், நீ சிரித்துவிட்டு என்னை நோக்கித் திரும்பிப் பார்ப்பது ஏன்?
அ. நீ எப்போது சிரித்தபடியே என்னைப் பார்க்க விரும்புகிறாய்
ஆ. எனக்குப் பகிடி பிடிக்குமா என நீ சோதிக்கிறாய்
இ. நீ எனது சிரிப்பில் ஈர்க்கப் பட்டிருக்கிறாய்

3. நீ ஒரு நாள் பாடிக் கொண்டிருக்கும்போது, நான் வகுப்பறைக்குள் நுழைந்ததும் பாடுவதை நிறுத்தியது ஏன்?
அ. எனக்கு முன்னால பாட உனக்கு நாணம்
ஆ. நான் வந்தது உனக்கு ஏதோ தாக்கம்
இ. எனக்கு உன்னோட குரல் பிடிக்குமா பிடிக்காதா என்ற பயம்

4. நீ உன்னோட குழந்தை வயதுப் புகைப்படத்தை தோழிகளுக்குக் காட்டும்போது, நான் கேட்க நீ தராமல் மறைத்தது ஏன்.
அ. உனக்கு வெட்கம்
ஆ. உனக்கு கூச்சம்
இ. ஏனென்று புரியவில்லை

5. நீ பேருந்தைத் தவறவிட்டு ஓடி வந்து ஏறும்போது நான் கையைக் கொடுத்தும் நீ எனது நண்பனின் கையையே பிடித்து ஏறியது ஏன்?
அ. நான் குழப்பமடைவதை ரசிப்பதற்கு
ஆ. எனது கையை பிடித்து ஏறி பின்னர் உன்னால் விலக முடியாது என்பதால்
இ. ஏனென்று புரியவில்லை

6. நேற்று நீ பேருந்திற்காகக் காத்திருந்து அது வந்தும்கூட நீ ஏறவில்லை. ஏன்?
அ. நீ எனக்காகக் காத்துக்கொண்டிருந்தாய்
ஆ. என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த படியால் தவறவிட்டுவிட்டாய்
இ. பேருந்து சனக்கூட்டத்தால் நிறைந்திருந்தது

7. உனது பெற்றோர்கள் கல்லூரிக்கு வந்திருந்தபோது என்னை நீ அவர்களுக்கு அறிமுகப் படுத்தினாய். ஏன்?
அ. நான் உனது கணவனாகப்போகிறவன் ஆகையால்
ஆ. உனது பெற்றோர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நீ அறியவேண்டும் போல இருந்ததால்
இ. ஏதோ என்னை அறிமுகப் படுத்தவேண்டும் போல் இருந்தது

8. நான் ஒரு நாள் எனக்கு பெண்கள் ரோஜா அணிவது பிடிக்கும் என்றவுடன், அடுத்தநாள் நீ தலையில் ரோஜாவுடன் வந்தது ஏன்?
அ. எனது விருப்பத்தைப பூர்த்தி செய்ய
ஆ. ரோஜாவை உனக்கும் பிடிக்கும்
இ. ஏதேச்சையாக நடந்தது

9. எனது பிறந்தநாள் அன்று நீயும் கோயிலுக்கு அதிகாலையிலேயே வந்திருந்தாய் ஏன்?
அ. என்னோட சேர்ந்து நீயும் கடவுளை கும்பிட வேணுமென்று
ஆ. யாரும் என்னைச் சந்திக்க முதல் நீயே என்னை சந்திக்க வேண்டும் என்பதால்
இ. நீ என்னை கோயிலில் வாழ்த்த வேணுமென்று உளமார விரும்பினாய்

  • 40 இற்கு மேல் புள்ளிகள் வந்தால், நீ என்னை காதலிக்கிறாய்.
  • 30 – 40 இற்குள் புள்ளிகள் வந்தால் காதல் உனது இதயத்தில் உள்ளது எப்போது வெடிக்கும் எனத் தெரியாதவாறு.
  • 30 இனைவிட புள்ளிகள் குறைவெனின் நீ என்னைக் காதலிப்பதா இல்லையா என்ற குழப்பத்தில் உள்ளாய்.
சந்தியா, உன்னிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டே இருக்கிறேன்.

என்றும் பிரியமுள்ள,
ஆகாஷ்


சந்தியாவிடமிருந்து பதில் வந்ததா? அல்லது அவள் நேரடியாகத் தன் காதலைச் சொன்னாளா? எதிர்பாருங்கள் அடுத்த பதிவில்

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

1 பின்னூட்டம்.

Mathuvathanan Mounasamy / cowboymathu April 12, 2008 at 1:25 PM

வாசகர்களே, இந்த இடுகையின் தொடரிடுகையான ஆகாஷூக்கு பதில் கடிதம் - சந்தியா இனை வாசியுங்கள்.

நன்றி,
கௌபாய்மது.:)

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ